4.22.2024

துளி. 391.

 இது என் தனிப்பட்ட கருத்து

நம் இருவருக்கும்
இடையேயான விவாதத்தில்
அது எதைப்பற்றியதாக
இருந்த போதிலும்
எதாவது ஒரு புள்ளியில்
நீ சொல்கிறாய்
இது என் தனிப்பட்ட கருத்து.
அப்படி நீ சொல்வதற்கு காரணம்
நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
என்பதினாலா இல்லை
அதை எனக்கு புரிய வைக்கமுடியாது
என்ற புரிதலா அல்லது
அது தனித்துவமானது
எல்லோருக்கும் புரியாது
என நம்புவதினாலா..
அது எப்படி இருப்பினும்
நமக்குள் இருப்பதாக நம்பிய
கருத்தொற்றுமை என்ற பிம்பம்
விழுந்து நொறுங்கவே செய்கிறது. 05.03.2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...