10.12.2021

திரை - 09

அன்பைத் தேடி அலைபவன்.
அன்பைப்போல் வன்முறை ஏதுமில்லை இந்த வரியை எங்கோ படித்ததாக நண்பர் சொன்னார் சில ஆண்டுகளுக்கு முன்பு அது அப்படியே என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதை அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. நேற்று HER படம் பார்த்ததும் இந்த வரி மறுபடியும் நினைவுக்கு வந்தது.
சிலருக்கு அன்பு செலுத்த மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் அன்பு செலுத்த ஆட்களைத்தேடி அலைகிறார்கள். அப்படி தேடி அலைவதினால் மட்டும் அன்பு கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமுமில்லை. நவீன தொழிற்நுட்பமான செயற்கை நுண்ணுயிர் அறிவியலில் இதுக்கு ஒரு வழிகிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற யோசனையின் விளைவுதான் HER திரைப்படமாகும். அப்படி கிடைக்கும் உறவு என்றும் நிலைத்து இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தான் அன்பு செலுத்தவும், பதிலுக்கு தன்மீது அன்பு செலுத்தப்படவும் ஓர் உயிர் தேவையாத்தான் இருக்கிறது.
சமகாலத்தில் இயற்கையைப்போல் அன்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது போலும். அதனால்தான் அன்பை தேடி அலைபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறதோ. சமகால மனிதனை அவனது நிழல்போலவே தனிமையையும் அவனைத் தொடர்ந்து கொண்டே வருகிறது. தனிமையை கொல்வது அல்லது தனிமையோடு உறவாடுவது எது அவனுக்கு சாத்தியம்.

04.05.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...