3.25.2022

துளி. 333

 கேள்வி பதில்

என்னப்பா எப்போ சோறு போடபோற
என்கிறார் நண்பனின் அப்பா,
என்ன மருகமபுள்ள பட்டுபுடவை எப்போ கிடைக்கும்
புன்னகையோடு கேள்வியை வீசுகிறார் பக்கத்து வீட்டு அத்தை,
எதுன்னா விசேசம் உண்டா
நயமாக வினவுகிறார் மற்றொரு நண்பனின் அம்மா,
இதே தோரணையில் கேள்வி கேட்டபடியே
இன்னும் சில உறவினர்,
பலரிடம் இப்படியே இருக்கேனே இது நல்லாதானே இருக்கு,
சிலரிடம் ஒருநாள் உறுதியாக நடக்கும்,
சில தருணங்களில் புன்னகையை மட்டும் பதிலாய் தந்து செல்கிறான்,
கல்யாணத்துக்கு பெண்தேடி களைத்துப்போன ஒருவன். 15.01.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...