புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருந்த வேலையில்தான் “புதுப்புனல்” புத்தகத்தை 2023 ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இதன் தொகுப்பாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன். இவரின் கட்டுரைகளை “காலச்சுவடு” இதழில் படித்திருக்கிறேன். இவருடைய பரிந்துரைகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
இந்த புத்தகத்தில் கீழ்காணும் 14 சிறுகதை ஆசிரியர்களை அறிமுகம் செய்துள்ளார். அவர்களுடைய கதைகளின் தன்மையை பொருந்து உபதலைப்பு கொடுத்துள்ளார். அது அந்த கதாசிரியர்களின் பார்வையை அல்லது அவர்கள் எதன்மீது அதிக கரிசனம் கொள்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருக்கிறது.
1. தூயன் – தந்தையர்களும் தனயர்களும்.
2. சுரேஷ் பிரதீப் – அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும்.
3. சித்துராஜ் பொன்ராஜ் – நடுவில் இருக்கும் கடல்.
4. ராம் தங்கம் – உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம்.
5. கிருஷ்ணமூர்த்தி – கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும்.
6. அனோஜன் பாலகிருஷ்ணன் – போரும் காமமும்.
7. கார்த்திக் பாலசுப்ரமணியம் – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்.
8. சுனில் கிருஷ்ணன் – புனைவெழுத்தில் புதிய சாத்தியங்கள்.
9. மயிலன் ஜி சின்னப்பன் – அகத்தின் ஆழம் தேடி.
10. கமலதேவி – கதை சொல்லாத கதைகள்.
11. திருச்செந்தாழை – துலா முள்ளின் அசைவுகள்.
12. செந்தில் ஜெகநாதன் – நிலமும் திரையும்.
13. கனகலதா – வேறு நிலம், வேறு முகம், ஒரே வலி.
14. லாவண்யா சுந்தரராஜன் – புதிய தலைமுறை பெண்களின் சவால்கள்.
வாசகர்களுக்கு புதிய தலைமுறை சிறுகதை ஆசிரியர்களை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த தொகுதி.1. போல் இன்னும் பல தொகுதிகள் வரவேண்டும் என விரும்புகிறேன். இன்றைக்கு நிறைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அவர்களில் சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காண இந்த புத்தகம் உதவியாக இருக்கிறது.
எம்.கோபாலகிருஷ்ணன் சிறுகதைகளை சிறப்பான முறையில் விளக்கி செல்கிறார். அவர் ஒரு சிறுகதை எதனால் சிறப்பானதாக அல்லது எதனால் முழுமையடையாமல் இருக்கிறது என விளக்கும்போது ஒரு சிறந்த சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதையும் சேர்த்தே விளக்கி விடுகிறார் என நம்புகிறேன். இந்த புத்தகத்தை படிக்கும் இளம்படைப்பாளிக்கு அது ஒருவகையில் சிறுகதை குறித்த பாடமாகவும் மாறிவிடுகிறது.
இந்த புத்தகத்தினை தமிழினி பதிப்பகம் (முதல் பதிப்பு – 2022) சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.
01.05.2026









