நவீன அரசுகள் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. விவசாயம் பொய்த்து போனால் விவசாயி மட்டும் வீழ்வதில்லை, அவன் வளர்க்கும் ஆடு மாடுகள் இல்லாமல் போகிறது. மாடு இல்லாமல் போனால் மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது. மாட்டு தரகர் வரண் பார்க்கும் தரகரா மாறுகிறார். மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் தாத்தாவை பத்தி கவலைப்படும் ஒரு படைப்பை ஜி.காரல் மார்க்ஸ் எழுதியுள்ளார். இவரது ‘’கட்டுத்தரை’’ எனும் சிறுகதை இதுபற்றிய சிறப்பான பதிவாகும். எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள ‘’ வருவதற்கு முன்பிருந்த வெயில்’’ சிறுகதை தொகுதியில் இந்த கதை உள்ளது. இதில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எளிய மொழியில் மனித மனங்களின் மேன்மை குணங்களையும், குருரங்களையும் பதிவு செய்துள்ளார்.
7.17.2017
பதிவு . 01
இலங்கை தீவில் தமிழ் இனப்படுகொலை நடந்ததுக்கான வரலாற்றுக் காரணங்கள் என்ன, அரசியல்
காரணங்கள் என்ன, பூளோக அரசியல் காரணங்கள் என்ன என்பதனை மிக தெளிவான ஆதாரங்களோடு ஈழ அறிஞர் மு.திருநாவுக்கரசு அண்மையில் (2016) எழுதியுள்ள நூல் "யாப்பு".
காரணங்கள் என்ன, பூளோக அரசியல் காரணங்கள் என்ன என்பதனை மிக தெளிவான ஆதாரங்களோடு ஈழ அறிஞர் மு.திருநாவுக்கரசு அண்மையில் (2016) எழுதியுள்ள நூல் "யாப்பு".
தனி தமிழ் ஈழ கோரிக்கையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், ஈழ அரசியலை புரிந்துகொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் " யாப்பு ".
மிகவும் சுவாரசியமான மொழியில் ஆழ்ந்த அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்கியுள்ளார். "ஆகுதி" பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
துளி.90
உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
01.07.2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
துளி. 396.
மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...
-
நாம் ஒன்றாக இருந்த தருணங்களில் ஒருவருக்கொருவர் பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான் ஆனாலும் நமக்கிடையேயான பிரிவு பெரும் துன்பத்தை பரிசளித்து ச...
-
கனமழையிலும் கறையாதிருக்கிறது உன் நினைவுகள்... 05.11.2017.
-
ஒளிரும் கண்கள் ...