7.17.2017

பதிவு . 02

நவீன அரசுகள் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. விவசாயம் பொய்த்து போனால் விவசாயி மட்டும் வீழ்வதில்லை, அவன் வளர்க்கும் ஆடு மாடுகள் இல்லாமல் போகிறது. மாடு இல்லாமல் போனால் மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது. மாட்டு தரகர் வரண் பார்க்கும் தரகரா மாறுகிறார். மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் தாத்தாவை பத்தி கவலைப்படும் ஒரு படைப்பை ஜி.காரல் மார்க்ஸ் எழுதியுள்ளார். இவரது ‘’கட்டுத்தரை’’ எனும் சிறுகதை இதுபற்றிய சிறப்பான பதிவாகும். எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள ‘’ வருவதற்கு முன்பிருந்த வெயில்’’ சிறுகதை தொகுதியில் இந்த கதை உள்ளது. இதில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எளிய மொழியில் மனித மனங்களின் மேன்மை குணங்களையும், குருரங்களையும் பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...