12.31.2018

பதிவு . 19

இந்த ஆண்டில் நான் பார்த்த தமிழ் படங்களில் எனக்கு பிடித்த படங்கள்..
01. ஒரு குப்ப கதை - காளி ரங்கசாமி.
02. மேற்குத் தொடர்ச்சிமலை - லெனின் பாரதி.
03. 96. - பிரேம்குமார்.
04. பரியேறும் பெருமாள் - மாரி செல்வராஜ்.
05. சீதக்காதி - பாலாஜி தரணிதரன்.

                                                                                                                                       31.12.2018

பதிவு .18

இந்த ஆண்டு நான் வாசித்தவற்றில் எனக்கு பிடித்த புத்தகங்கள்
நாவல்கள்
01. காதுகள் - எம்.வி.வெங்கட்ராமன்.
02. ஜீவனாம்சம் - சி.சு.செல்லப்பா.
03. . செல்லாப் பணம் - இமையம்.
04. கோவேறு கழுதைகள் - இமையம்.
05. பெருவலி - சுகுமாரன்.
06. காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்/கே.நல்லதம்பி.
07. நிலவறைக் குறிப்புகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி/எம்.ஏ.சுசிலா.
சிறுகதைகள் தொகுப்பு
08. கு.பா.ரா கதைகள் பாகம் 1
09. சாவு சோறு - இமையம்.
10. கொலை சேவல் - இமையம்.
சினிமா
11. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின்.
அரசியல்
12. நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் - பி.ஆர்.அம்பேத்கர்.
13. ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் - பால் ப்ராலிச்/கொற்றவை.
சுயமுன்னேற்றம்
14. உச்ச கட்ட வெற்றிக்கான வழிகாட்டி - ராபின் ஷர்மா.
15. சாக்குப்போக்குகளை விட்டொழிங்கள் -
பிரையன் டிரேசி.
16. நேர நிர்வாகம் - பிரையன் டிரேசி.
மற்றவை
17. வினயா - மொ.பு. குளச்சல் மு.யூசப்.
18. உடலினை உறுதி செய் - செ.சைலேந்திர பாபு.
19. தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் -
அக்குஹீலர் அ.உமர்பாரூக்.

                                                                                                                          31.12.2018

திரை . 06

இருளான
பன்னிரெண்டு ஆண்டுகள்
A twelve year night - Alvaro Brechner - Uruguay - 2018
இந்த திரைப்படம் பாலுமகேந்திரா நூலக அமைப்பு சார்பாக இன்று காலை டிஸ்கவரி புக் பேலஸில் திரையிடப்பட்டது. சென்னை திரைப்பட விழாவில் தவறவிட்ட இந்த படத்தை இன்று பார்த்தேன்.
மூன்று அரசியல் கைதிகள் பன்னிரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தில் அரசால் எந்தளவு கொடுமைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லும் படமாகும்.
எல்லா நாடுகளிலும் அரச வன்முறை என்பது மிக கொடுமையானதுதான் போலும். தள்ளாத வயதிலும் சிறையிலிருக்கும் மகனை பார்க்க அளைந்து திரியும் தாய், பல சித்தரவதைகளுக்கு இடையில் வாழ்ந்தாலும் தன்னை காணவரும் மகளை மகிழ்ச்சி படுத்தும் தந்தை என படம் நம் உணர்வோடு கலந்து விடுகிறது.
இது போன்ற ஒரு அரசியல் படம் இந்தியாவில் எடுக்கப்பட்டால் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக சாவேன் என திரை விமர்சகர் சுரேஷ் கண்ணன் எழுதிய முகநூல் பதிவுதான் என்னை இந்த படத்தை தேடி பார்க்க தூண்டியது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த திரையிடல் சாத்தியமாக காரணமான இருந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

                                                                                                                                      30.12.2018.

பதிவு . 17

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "நிலவறைக் குறிப்புகள் " நாவலை வாசித்தேன். பல உளவியல் நூல்கள் வாசித்து தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகளை இந்த நாவல் ஒரேயொரு பிரதான கதாப்பாத்திரம் வாயிலாக மனித உளவியல் பற்றி காத்திரமாக பதிவு செய்துள்ளது.
சுமார் இருநூறு பக்கங்கள் மட்டுமேயுள்ள இந்தநாவலில் பொருளும்,அன்பும்,அதிகாரமும் அற்ற ஓர் எளிய மனிதனின் ஒற்றை குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயுள்ளது. ஒருவன் கண்ணாடி முன் நிற்கும்போது அவன் உடலில் உள்ள அழகு,அசிங்கம் அவனுக்கு தெரிவதுபோல் இந்நாவல் மானுடத்தின் உளவியலை பிரதிப்பலிக்கிறது.
நாவலை எம்.ஏ.சுசீலா சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நேரிடையாக தமிழில் எழுதப்பட்ட நாவலை வாசிக்கும் அனுபவத்தை தருகிறது.
நற்றிணை பதிப்பகம் கிளாசிக் உலக நாவல் வரிசையில் இந்நாவலை சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

                                                                                                                                                     29.12.2018

பதிவு . 16

ஒரு படம் ஒரு புத்தகம்
The Wild Pear Tree – Nuri Bidge Ceylen – Turkey. இந்த படத்தை சென்னை திரைப்படவிழாவில் பார்த்தேன். ஒரு நாவலை படித்த அனுபவம் ஏற்பட்டது. பட்டபடிப்பை முடித்த இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் வாழ்வியல் அனுபவமே கதையாகும். ஒரு எழுத்தாளருடன் அவன் இலக்கியம் பற்றி மேற்கொள்ளும் உரையாடல், அவனது நண்பர்களுடன் நீண்டநேரம் நடந்தபடியே கடவுள் பற்றி அவர்களுக்குள் நடக்கும் விவாதம், அவனது அம்மா மற்றும் அப்பாவுடன் வாழ்வுப்பற்றி அவன் மேற்கொள்ளும் உரையாடல் என அனைத்தும் ரஷ்ய நாவல்களை வாசிப்பது போன்ற மயக்கத்தை என்னுள் உருவாக்கியது.
அண்மையில் கன்னட மொழிபெயர்ப்பு நாவலான ”காச்சர் கோச்சர்” –ஐ வாசித்தேன், இதை விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதியுள்ளார். தமிழில் கே.நல்லதம்பி மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்நாவலின் கதைநாயகன் ஒரு காபி ஹவுஸில் அமர்ந்து கொண்டு தன் குடும்பகதையை சொல்லுகிறான். மனிதர்களை காப்பாற்றும் இந்த குடும்ப அமைப்புதான் தன்னை கேள்விக்குட்படுத்தும் மனிதர்களை காவுவாங்கவும் செய்கிறது. இந்தநாவல் குடும்ப அமைப்பை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. ஒரு திரைப்படத்தை பார்த்த உணர்வு இந்நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றியது.

                                                                                                                                    25.12.2018

துளி . 205

அலைந்து 
திரிகிறது 
மனம்
தேவதையின்
விழிகள்
உருளும்
திசையெங்கும்...


                                  22.12.2018.

திரை . 05

கடந்த ஒரு வாரமாக நடந்த16வது சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஏழு நாட்களில் சுமார் 25 திரைப்படங்கள் பார்த்தேன். சிறப்பான அனுபவமாக இருந்தது. பல நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க முடிந்தது. நான் பார்த்த படங்களில் எனக்கு பிடித்த படங்களின் பட்டியல் இது.
01. In the fade - Faith Akin - Germany.
02. Shoplifters - Hirokazu Koreeda - japan.
03. 3 Faces - Jafer Panahi - Iran.
04. Bingo : The King of the Mornings - Brazil.
05. Woman at War - Benedikt Erilingsson - Iceland.
06. Toni Eradmann - Maren Ade - Germany.
07. Western - Valeska Grisebach - Germany.
08. At War - Stephane Brize - France.
09. Stefan Zweig - Maria Schrader - Germany.
10. Killing Jesues - Laura Mora Otenga - Colombia.
11. 53 wars - Ewa Bukowska - Poland.
12. What will people say - Iram Haq - Norway.
13. IRO - Hadi Mohanhegh - Iran.
14.The Wild Pear Tree - Nuri Bilge Ceylan - Turkey.
15. Eternal Winter - Attila Szasz - Hungary.
16. Yomeddine - A.B.Shawky - Egypt.
17. A Family Tour - Liang Ying - Taiwan.
18. The Rib - Zhang Wei - China.

                                                                     21.12.2018.

துளி . 204

எதிர்பாராத 
இன்பம்
எதிர்பாராத 
துன்பம்
எப்படி 
எதிர்கொள்ள
இவ்வாழ்வை...

                                    17.12.2018

துளி . 203

மாமழையில் 
நனைந்த
பேரானந்தத்தை 
தருகிறது
தேவதையின் 
புன்சிரிப்பு...


                          14.12.2018

துளி . 202

நீண்ட நெடும்காலம்
தேடி கண்டடைந்த
பொய்கையில்
நீராடி திளைக்கிறான்
தன் ஆசைதீர...
ஆசை தீரக்கூடியதானா
தீராது யோசிக்கிறான்
நீராடிக் கொண்டே...

                                                 09.12.2018.

துளி . 201

பேரன்புடன் 
பரிசளித்து 
செல்கிறாய்
தூக்கமில்லா
இரவு ஒன்றை...

                               08.12.2018.

பதிவு . 17

வாசிக்க தொடங்கி பல வருடங்களுக்கு பிறகும் ஏனோ எனக்கு சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்களை வாசிக்க விருப்பம் இல்லாமலேயிருந்தேன்.
எதிர்பாராதவிதமாக சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ராபின் ஷர்மாவின் புத்தகம் ஒன்றை வாசித்தேன். அதில் எண்ணங்களை மேம்படுத்துவது பற்றி எழுதியிருந்தது எனக்கு பிடித்தது. அதிலிருந்து இது போன்ற வேறு சில புத்தகங்களையும் அவ்வப்போது வாசிக்கிறேன்.
அப்படி அண்மையில் வாசித்து முடித்த நூல்தான் பிரையன் டிரேசியின் "சாக்கு போக்குகளை விட்டொழிங்கள்". டிரேசி மிகத் தெளிவாக மனிதனுக்கு அவசியம் தேவையான சுய ஒழுங்கு சுமார் 21 அத்தியாங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.
சுயமுன்னேற்ற நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசித்து பார்க்கலாம்.
நிறைய சுயமுன்னேற்ற நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ள நாகலட்சுமி சண்முகம் தான் இந்நூலையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
என் அனுபவத்தில் எல்லா சுய முன்னேற்றம் பற்றிய நூல்களும் சொல்ல வரும் செய்தி திருவள்ளுவரின் "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது
உயர்வு" என்பதைதான். இந்த குறளுக்கு விளக்கம் சொல்ல எழுதப்பட்ட நூல்களாகத்தான் எல்லா சுயமுன்னேற்ற நூல்களும் உள்ளன.
                                                                                                                            05.12.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...