12.31.2018

பதிவு . 17

வாசிக்க தொடங்கி பல வருடங்களுக்கு பிறகும் ஏனோ எனக்கு சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்களை வாசிக்க விருப்பம் இல்லாமலேயிருந்தேன்.
எதிர்பாராதவிதமாக சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ராபின் ஷர்மாவின் புத்தகம் ஒன்றை வாசித்தேன். அதில் எண்ணங்களை மேம்படுத்துவது பற்றி எழுதியிருந்தது எனக்கு பிடித்தது. அதிலிருந்து இது போன்ற வேறு சில புத்தகங்களையும் அவ்வப்போது வாசிக்கிறேன்.
அப்படி அண்மையில் வாசித்து முடித்த நூல்தான் பிரையன் டிரேசியின் "சாக்கு போக்குகளை விட்டொழிங்கள்". டிரேசி மிகத் தெளிவாக மனிதனுக்கு அவசியம் தேவையான சுய ஒழுங்கு சுமார் 21 அத்தியாங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.
சுயமுன்னேற்ற நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசித்து பார்க்கலாம்.
நிறைய சுயமுன்னேற்ற நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ள நாகலட்சுமி சண்முகம் தான் இந்நூலையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
என் அனுபவத்தில் எல்லா சுய முன்னேற்றம் பற்றிய நூல்களும் சொல்ல வரும் செய்தி திருவள்ளுவரின் "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது
உயர்வு" என்பதைதான். இந்த குறளுக்கு விளக்கம் சொல்ல எழுதப்பட்ட நூல்களாகத்தான் எல்லா சுயமுன்னேற்ற நூல்களும் உள்ளன.
                                                                                                                            05.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...