10.31.2018

துளி . 195

சாதிவெறி
சமாதியாகும்
நாளும் வராதோ....

                                  25.10.2018

பதிவு . 15

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் – அக்குஹீலர் அ.உமர்பரூக்
சுமார் நாற்பது பக்கங்களேயுள்ள இச்சிறுப்புத்தகம் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உயிர் காக்க போடப்படுவதாக சொல்லப்படும் தடுப்பூசியின் வரலாறு நம்மை நிலைகுலைய வைக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணதிகாரம் உலகின் எல்லா அரசுகளையும் அடிபணிய வைப்பதாகவே உள்ளது.
பருவநிலை மாற்றதினால் புதுப்புது நோய்கள் உருவாகுவதும் பிறகு காணாமல் போவதும் இயல்பாக உள்ள நிகழ்வை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக்கி மக்கள் மனதில் உயிர் பயத்தை விதைத்து எப்படியெல்லாம் அதை பெரும் வியபாரமாக மாற்றுகிறது என்பதை இச்சிறுநூல் விளக்குகிறது.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தடுப்பூசிகள் போடுவதற்கு முன்பிருந்த நிலையையும் அதற்குபிறகான மாற்றங்களையும் அந்த நாட்டு அரசுகளின் புள்ளிவிவரங்களோடு தடுப்பூசியின் உண்மை நிலவரத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
தடுப்பூசி போடாமல் ஆரோக்கியமாக எப்படி வாழ்வது என்பதனை இந்நூல் இன்னும் விளக்கமாக கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்நூலை எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு 2015 வெளியாகியுள்ளது.
இந்த புத்தகத்திலிருந்து சில தகவல்கள்...
‘’ 1961 ஆம் ஆண்டிற்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் காரணம் – போலியோ சொட்டு மருந்து தான் ‘’ என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒத்துக்கொண்டார் ஜோனல் சால்க். இவர் யார் தெரியுமா ? இவர் தான் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தவர்.
‘’ போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில் இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்று சொன்னார் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய சாபின்.
அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்(1/10000), 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவர்(1/150). 3000 மடங்கு அதிகரிப்பு.
இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தடை செய்யவேண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர்.சத்யமாலா MBBS தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

                                                                                                      19.10.2018

துளி . 194

என் எல்லா 
துயரையும் 
போக்கிடும் 
மாமருந்து
தேவதையின்
இதழ் முத்தம்....


                         19.10.2018

பதிவு . 14

சாவு சோறு – இமையம்
எழுத்தாளர் இமையத்தின் சாவு சோறு சிறுகதை தொகுதியை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் உள்ளன. நவரசம் என்பது போல ஒவ்வொருகதையும் தனித்தனி சிறப்புடையது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களே இந்த கதைகள் நிகழும் களனாகும்.
கடவுளை/பேயியை சக மனிதன் போல பாவித்து திட்டுவதும், கொஞ்சுவதும், ஆசைக்காட்டுவதும், தன் சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்வதும் இயல்பாக இமையத்தின் கதைகளில் பதிவாகியுள்ளது. களவுக்கு போக கடவுளின் உத்தரவு வேண்டி கடவுளோடு உறையாடும் மனிதனின் கதையை சொல்லும் ஆகாசத்தின் உத்தரவு,
கடவுளிடம் வரம் கேட்பது வாழ்வதற்கு மட்டுமல்ல போலும், உறவுமுறை மாறி காதலித்து ஓடிப்போன பெண் இறந்து போக வேண்டுமென வேடப்பரிடம் வரம் கேட்கும் அம்மாவின் கதையை சொல்லும் வரம்,
பேயிக்கும் பூசாரிக்குமான உறையாடல் அற்புதமாக பதிவு செய்திருக்கும் பத்தினி இலை,
தன் முன்னாள் காதலியை சந்திக்க மிக ஆவலுடன் செல்லும் ஆசிரியரின் கதையான ராணியின் காதல், காசில்லாதவருக்கு காதல் காவியம் அல்ல என்பதை முகத்தில் அடித்து சொல்கிறது இந்தகதை,
மனித உரிமையின் பெயரால் மாணவர்களை அடிக்கக்கூடாது என சட்டம் வந்தபின் ஆசிரியர்களின் நிலமையை அதுவும் அரசாங்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையை விளக்கும் அரசாங்க பள்ளிக்கூடம்,
தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியா சுத்தமாகிவிட்டது என விளம்பர பலகைகள் சொன்னாலும் கிராமங்களில் இன்னும் பெரும்பாலும் திறந்தவெளியில்தான் மக்கள் மலம் கழித்துக்கொண்டுள்ளார்கள். இந்த துயரிலிருந்து மீள ஆசைப்படும் ஒரு இளம்பெண்ணின் கதையை சொல்லும் பேராசை,
பொருள் திருட்டு போகும் பொண்ணு திருட்டு போகுமா என வியக்க வைக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ள திருட்டுபோன பொண்ணு கதை நம் கண்களில் கண்ணீரை வரவைக்க கூடிய கதையாகும்,
தலைமுறை இடைவெளியினால் மனிதர்கள் மிகவும் வன்மமான மனநிலைக்கு சென்று விடுகின்றனர். பேரன்பால் வளர்க்கப்பட்ட மனிதர், பெரும் நன்றியுணர்வோடு வாழ்கிறார் ஆனால் அவரின் மகனின் முன் வீழ்ந்துதான் போகிறார். கடந்தகாலம் இனிமையானதாகவும் நிகழ்காலம் கசப்பானதாகவும் தோன்றும் வாழ்வியலை சொல்லும் பரிசு,
இந்த சிறுகதை தொகுப்பின் தலைப்பு கதையான சாவு சோறு வேறு சாதி ஆணை காதலித்து அவனோடு ஓடிப்போன பெண்ணை தேடி அலையும் அம்மாவின் கதை. இந்த சமூகத்தில் சாதி வன்மம் எப்படி செயல்பட்டது, இப்போதும் எப்படி செயல்படுகிறது அதனால் பெண்கள் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கபடுகிறார்கள் என்பதை ஒரு பெண்ணின் வாக்குமூலமாகவே இந்த கதையில் பதிவாகியுள்ளது.
பரிசு,சாவு சோறு இரு சிறுகதைகளும் தமிழின் மிக முக்கியாமான சிறுகதைகள் என நான் நம்புகிறேன்.
பலரும் காண தவறிய உண்மைகளை தன் படைப்புகளில் இமையம் நேர்மையாக பதிவு செய்துள்ளார். இதனாலேயே இவரின் படைப்புகள் மிக முக்கியமானதாக மாறுகிறது.
இமையம் தமிழ் இலக்கியவுலகில் பிரவேசித்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் நாம் அவருடைய படைப்புகளை தேடி வாசிப்பதே நாம் அவருக்கு அளிக்கும் வெகுமதியாக இருக்குமென நம்புகிறேன்.
இமையத்தின் படைப்புகளை தொடர்ந்து வெளியிடும் க்ரியா பதிப்பமே இந்நூலையும் சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு 2014-ல் வெளிவந்துள்ளது.

                                                                                                                         08.10.2018.


Image may contain: bird

துளி . 193

அடிமை தேசத்தில் 
உமக்கிருந்த கருத்து 
சுதந்திரம்
இப்போது எமகில்லை 
பிதாவே
உம் பெயர் கொண்ட 
தேசத்தில் கருத்து 
சுதந்திர போராட்டம் 
ஆதிலிருந்து 
தொடங்கியுள்ளது 
மறுபடியும்...

                                                02.10.2018

துளி . 192

பிடிக்காதவற்றையும் 
செய்கிறேன் எனக்கு
பிடித்தவருக்காக...

                                  30.09.2018.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...