10.31.2018

பதிவு . 15

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் – அக்குஹீலர் அ.உமர்பரூக்
சுமார் நாற்பது பக்கங்களேயுள்ள இச்சிறுப்புத்தகம் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உயிர் காக்க போடப்படுவதாக சொல்லப்படும் தடுப்பூசியின் வரலாறு நம்மை நிலைகுலைய வைக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணதிகாரம் உலகின் எல்லா அரசுகளையும் அடிபணிய வைப்பதாகவே உள்ளது.
பருவநிலை மாற்றதினால் புதுப்புது நோய்கள் உருவாகுவதும் பிறகு காணாமல் போவதும் இயல்பாக உள்ள நிகழ்வை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக்கி மக்கள் மனதில் உயிர் பயத்தை விதைத்து எப்படியெல்லாம் அதை பெரும் வியபாரமாக மாற்றுகிறது என்பதை இச்சிறுநூல் விளக்குகிறது.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தடுப்பூசிகள் போடுவதற்கு முன்பிருந்த நிலையையும் அதற்குபிறகான மாற்றங்களையும் அந்த நாட்டு அரசுகளின் புள்ளிவிவரங்களோடு தடுப்பூசியின் உண்மை நிலவரத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
தடுப்பூசி போடாமல் ஆரோக்கியமாக எப்படி வாழ்வது என்பதனை இந்நூல் இன்னும் விளக்கமாக கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்நூலை எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு 2015 வெளியாகியுள்ளது.
இந்த புத்தகத்திலிருந்து சில தகவல்கள்...
‘’ 1961 ஆம் ஆண்டிற்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் காரணம் – போலியோ சொட்டு மருந்து தான் ‘’ என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒத்துக்கொண்டார் ஜோனல் சால்க். இவர் யார் தெரியுமா ? இவர் தான் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தவர்.
‘’ போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில் இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்று சொன்னார் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய சாபின்.
அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்(1/10000), 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவர்(1/150). 3000 மடங்கு அதிகரிப்பு.
இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தடை செய்யவேண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர்.சத்யமாலா MBBS தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

                                                                                                      19.10.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரை.24 / Santosh

  Santosh / Sandhya Suri / 2024 / Hindi இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி....