5.30.2026

பதிவு. 97 - புதுப்புனல்.



 புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருந்த வேலையில்தான் “புதுப்புனல்” புத்தகத்தை 2023 ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இதன் தொகுப்பாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன். இவரின் கட்டுரைகளை “காலச்சுவடு” இதழில் படித்திருக்கிறேன். இவருடைய பரிந்துரைகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
இந்த புத்தகத்தில் கீழ்காணும் 14 சிறுகதை ஆசிரியர்களை அறிமுகம் செய்துள்ளார். அவர்களுடைய கதைகளின் தன்மையை பொருந்து உபதலைப்பு கொடுத்துள்ளார். அது அந்த கதாசிரியர்களின் பார்வையை அல்லது அவர்கள் எதன்மீது அதிக கரிசனம் கொள்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருக்கிறது.
1. தூயன் – தந்தையர்களும் தனயர்களும்.
2. சுரேஷ் பிரதீப் – அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும்.
3. சித்துராஜ் பொன்ராஜ் – நடுவில் இருக்கும் கடல்.
4. ராம் தங்கம் – உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம்.
5. கிருஷ்ணமூர்த்தி – கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும்.
6. அனோஜன் பாலகிருஷ்ணன் – போரும் காமமும்.
7. கார்த்திக் பாலசுப்ரமணியம் – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்.
8. சுனில் கிருஷ்ணன் – புனைவெழுத்தில் புதிய சாத்தியங்கள்.
9. மயிலன் ஜி சின்னப்பன் – அகத்தின் ஆழம் தேடி.
10. கமலதேவி – கதை சொல்லாத கதைகள்.
11. திருச்செந்தாழை – துலா முள்ளின் அசைவுகள்.
12. செந்தில் ஜெகநாதன் – நிலமும் திரையும்.
13. கனகலதா – வேறு நிலம், வேறு முகம், ஒரே வலி.
14. லாவண்யா சுந்தரராஜன் – புதிய தலைமுறை பெண்களின் சவால்கள்.
வாசகர்களுக்கு புதிய தலைமுறை சிறுகதை ஆசிரியர்களை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த தொகுதி.1. போல் இன்னும் பல தொகுதிகள் வரவேண்டும் என விரும்புகிறேன். இன்றைக்கு நிறைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அவர்களில் சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காண இந்த புத்தகம் உதவியாக இருக்கிறது.
எம்.கோபாலகிருஷ்ணன் சிறுகதைகளை சிறப்பான முறையில் விளக்கி செல்கிறார். அவர் ஒரு சிறுகதை எதனால் சிறப்பானதாக அல்லது எதனால் முழுமையடையாமல் இருக்கிறது என விளக்கும்போது ஒரு சிறந்த சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதையும் சேர்த்தே விளக்கி விடுகிறார் என நம்புகிறேன். இந்த புத்தகத்தை படிக்கும் இளம்படைப்பாளிக்கு அது ஒருவகையில் சிறுகதை குறித்த பாடமாகவும் மாறிவிடுகிறது.
இந்த புத்தகத்தினை தமிழினி பதிப்பகம் (முதல் பதிப்பு – 2022) சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

01.05.2026



பதிவு. 96 திரையில் மலர்ந்த சிறுகதைகள்.



 திரையில் மலர்ந்த சிறுகதைகள்.

இலக்கிய படைப்புகளை திரைப்படமாக எடுப்பது உலகு முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழிலும் நிறைய படைப்புகள் உருவாகியுள்ளது. அப்படி மலையாள சினிமாவில் வெளியான நான்கு திரைப்படங்கள் உருவாக காரணமாக இருந்த ஐந்து சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகமாகும்.
இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய யாத்ரா(1985) திரைப்படத்தின் மூலகதை அமெரிக்க எழுத்தாளர் பீட் ஹாமின் “வீடு திரும்புதல்” என்ற சிறுகதையாகும். இந்த சிறுகதை ஜப்பானில் “மஞ்சள் நிற கைகுட்டை”-யாகவும் மலையாளத்தில் “யாத்ரா”வாகவும் உருமாறி வந்துள்ளது.
இயக்குனர் ஜி.அரவிந்தன் இயக்கிய “சிதம்பரம்”(1985) திரைப்படம், மலையாள எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமனின் “சிதம்பரம்” சிறுகதையை அடைப்படையாக கொண்டது.
இயக்குனர் சி.வி.சந்திரனின் “பொந்தன் மாடா”(1994) திரைப்படம் எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமனின் “பொந்த மாடா” மற்றும் “சீமைத்தம்புரான்” சிறுகதைகளை அடைப்படையாக கொண்டது.
இயக்குனர் பரதனின் “தகர”(1979) திரைப்படம் எழுத்தாளர் பி.பத்தமராஜின் “தகர” சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இதே கதையை அதே இயக்குனர் தமிழில் “ஆவராம் பூ” என எடுத்துள்ளார்.
நான் இந்த நான்கு படங்களையும் பார்த்ததில்லை. இந்த புத்தகத்தை படித்த பிறகு இந்த நான்கு படங்களையும் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்த்துள்ளேன்.
மலையாளத்தில் சிறுகதை என்ன தலைப்பில் எழுதப்பட்டதோ அதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. ஆனால் சிறுகதையில் உள்ளதை மட்டும் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் எதை கூட்டினார்கள், எதை குறைத்தார்கள், எதை மறைத்தார்கள், எதை வெளிப்படையாக வைத்தார்கள் என்பதை படம் பார்த்துதான் தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி தெரிந்து கொள்வதும் அதை காரண காரியங்களோடு புரிந்து கொள்வதும் திரைக்கதையை கற்றுக்கொள்ள நல்ல பயிற்சியாக இருக்குமென கருதுகிறேன். இந்த புத்தகத்தின் நோக்கமும் அதுவாகதான் இருக்க முடியும் என நம்புகிறேன்.
இந்த புத்தகத்தில் எடுத்துக்கொண்ட திரைப்படம் குறித்தும் அதன் இயக்குனர் மற்றும் சிறுகதை ஆசிரியர் குறித்தும் தனித்தனியே குறிப்புகள் இருக்கிறது. இது அவர்களின் மற்ற படைப்புகளை தேடி செல்ல உதவியாக இருக்கிறது.
இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போல் இருக்கிறது. அந்த அளவுக்கு சிறப்பான முறையில் அவைநாயகம் மொழிப்பெயர்ந்துள்ளார்.
சிறப்பான அடைப்படத்துடன் இந்த புத்தகத்தை மதிமலர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
18.04.2026

All reactions:
Pirabu 

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...