இந்திய சினிமா சில தரிசனங்கள் – செந்தூரம் ஜெகதீஷ்.
இந்த புத்தகத்திற்கு இந்திய சினிமா என்று பெயர் இருந்தாலும் இதில் பழைய இந்தி சினிமாக்கள் குறித்தே அதிகம் எழுதுப்பட்டுள்ளது.
பழம்பெரும் இந்தி இயக்குனர்கள் & நடிகர்கள்- ராஜ்கபூர், தேவ் ஆனந்த், குருதத், மனோஜ் குமார், சசி கபூர்… மேலும்
இசையமைப்பாளர்கள் - எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், சலீல் செளத்ரி, ராம் லட்சுமண்.. மேலும்
பாடலாசிரியர்கள் - குல்சார், ஜாவேட் அக்தர், கைஃபி ஆஸ்மி.. மேலும்
பாடகர்கள் - முகமது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர்.. மேலும்
மேற்கண்ட பட்டியலில் இருப்போரும் அவர்களது சமகாலத்தவர்கள் குறித்தும் மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆளுமைகளின் சினிமா வாழ்க்கை மட்டும் இல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளது.
இந்தி பாடல்கள் குறித்தும் ஒரு பகுதி எழுதியுள்ளார். பாடல் வரிகளில் மிளிரும் கருத்துகள் குறித்து மிகவும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். பாடகர்களின் குரல் நயம் குறித்தும் விதந்து எழுதியுள்ளார்.
அண்மைகால இந்தி படங்களான பத்லாபூர், உட்தா பஞ்சாப் குறித்தும் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
செந்தூரம் ஜெகதீஷ் தன் இளமை காலம் தொட்டே இந்தி சினிமா பார்ப்பதும், இந்தி பாடல்களை கேக்கவும் செய்திருப்பதினால் இந்தி சினிமா உலகம் குறித்த நிறைய தகவல்களை இந்த புத்தகத்தில் தூவி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.
இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில பாடல்களை கேட்டேன். புது அனுபவமாக இருந்தது. இதில் குறிப்பிட்டுள்ள இந்தி படங்களையும் பார்க்க திட்டமிட்டுள்ளேன். பழைய இந்தி சினிமாவை அறிந்துகொள்ள இந்த புத்தகம் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம். இந்த புத்தக வரிசை தொடரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
இந்த புத்தகத்தை செந்தூரம் பதிப்பம் (முதல் பதிப்பு 2019) வெளியிட்டுள்ளது.
- 20.05.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக