11.19.2023

திரை. 20

 ஈரான் படங்களை பார்க்கும்போது, ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு எப்படி இவ்வளவு சிறப்பான படங்களை எடுக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். சில மலையாள, மாராத்தி படங்களை பார்க்கும்போது இதே மனநிலை தோன்றும்.

தமிழில் அப்படி ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு சிறப்பான படமாக ''கூழாங்கல்'' வெளிவந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு வரண்ட கிராமத்தையும் அதில் வாழும் சில மனிதர்களையும் உண்மைக்கு மிக நெருக்கமாக திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் இல்லை, மயிர்கூச்செரியும் சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் உண்மையான மானுட வாழ்க்கை இருக்கிறது.
தமிழில் ஓர் உலக சினிமா என சிலப்படங்களுக்கு விளம்பரம் மட்டும் செய்வார்கள். கூழாங்கல் உண்மையான வாழ்வை சொல்லும் தமிழ் திரைப்படம். அதனாலேயே அது உலக திரைப்படமாகவும் மிளிர்கிறது. 05.11.2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...