வாழ்வை நிறுத்துதல் – அதிஷா
எனக்கு தியானம் கற்றுக்கொள்ள விருப்பம். அதனால் சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு நடைப்பெறும் தியான வகுப்பில் ஒருமுறை கலந்துக்கொண்டு இருக்கிறேன். பிறகு மனவளக்கலை மன்றத்தில் நடைபெறும் வகுப்புக்கு சிலமுறை சென்று இருக்கிறேன். ஒருமுறை நித்தியானந்தாவின் கிளை ஒன்றிலும் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எதையும் முழுமையாக பின்பற்றி தியானம் மட்டும் செய்ததே இல்லை. ஆனாலும் தியானம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் புத்தகம் படிப்பதும் உரைகள் கேட்பதும் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் அதிஷா விபாசனா தியான முகாமுக்கு சென்று வந்த அனுபவத்தை முகனூலில் எழுத தொடங்கினார். அப்பொழுது சில பகுதிகள் படித்தேன். பிறகு தொடர முடியாமல் விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அந்த பகுதிகளை படிக்க வேண்டும் என விரும்பினேன். எழுத்தாளர் அதிஷாவை முகனூல் தொடர்பு கொண்டு அந்த இணைப்புகள் கிடைக்குமா என கேட்டேன். அவரும் உடனே அனுப்பி வைத்தார். அதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்தேன்.
விபாசன தியானம் எப்போது யாரால் கண்டுபிடிக்க பிடிக்கப்பட்டது, அது எப்படியெல்லாம் உருமாறி வளர்ந்து வந்துள்ளது, இந்தியாவில் இந்த முகாம் எங்கெல்லாம் இருக்கிறது, தியான முகாமில் தியானம் எவ்வாறு சொல்லி தரப்படுகிறது, அதன் தினசரி நடவடிக்கைகள் என்ன என்ன, அதை பின்பற்றும்போது உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்ன என்பதை மிகவும் சுவராசியாமாகவும் நகைச்சுவை உணர்வோடும் அதிஷா எழுதியுள்ளார்.
பதினெட்டு பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கும் இந்த தியான அனுபவ பதிவை படிப்பதே ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இது புத்தகமாக வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
இந்த பதிவுகள் ஒருவகையில் நம் அனுபவங்களை எப்படி எழுத்தாக மாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அதிஷாவின் எழுத்தில் எளிமையும் நகைச்சுவையும் தத்துவார்த்த சிந்தனைகளும் மிளிர்ந்தபடியே இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
18.08.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக