11.30.2025

துளி - 412

செய்யக்கூடாது என நினைத்ததை

தொடர்ந்து செய்துக்கொண்டும்

செய்யவேண்டும் என நினைத்ததை

செய்யாமல் தொடர்ந்து கொண்டும்

யாராலும் எதனாலும்

திருப்பி தரமுடியாத

காலத்தை கரைத்துக்கொண்டு இருக்கிறேன் நான்.

29.10.2025

துளி - 411

தவறான வழி நடப்பவன்

சரியான வழி நடப்பவனுக்கு

அறிவுறை சொல்லும்

காலம் இது. 

28.10.2025

8.31.2025

துளி. 410

நீங்கள் உங்களை

புத்திசாலியாக

திறமைசாலியாக

எப்படி வேண்டுமானாலும்

நினைத்துக்கொள்ளலாம்

தவறில்லை

ஆனால்

எதிரே இருப்பவனை

முட்டாளாக நினைப்பது

புத்திசாலித்தனமில்லை.

31.08.2025

துளி. 409

ஒருபோதும் யாசித்து

பெறக்கூடாத ஒன்று

அன்பு.

28.08.2025

பதிவு. 93

 வாழ்வை நிறுத்துதல் – அதிஷா

எனக்கு தியானம் கற்றுக்கொள்ள விருப்பம். அதனால் சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு நடைப்பெறும் தியான வகுப்பில் ஒருமுறை கலந்துக்கொண்டு இருக்கிறேன். பிறகு மனவளக்கலை மன்றத்தில் நடைபெறும் வகுப்புக்கு சிலமுறை சென்று இருக்கிறேன். ஒருமுறை நித்தியானந்தாவின் கிளை ஒன்றிலும் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எதையும் முழுமையாக பின்பற்றி தியானம் மட்டும் செய்ததே இல்லை. ஆனாலும் தியானம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் புத்தகம் படிப்பதும் உரைகள் கேட்பதும் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் அதிஷா விபாசனா தியான முகாமுக்கு சென்று வந்த அனுபவத்தை முகனூலில் எழுத தொடங்கினார். அப்பொழுது சில பகுதிகள் படித்தேன். பிறகு தொடர முடியாமல் விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அந்த பகுதிகளை படிக்க வேண்டும் என விரும்பினேன். எழுத்தாளர் அதிஷாவை முகனூல் தொடர்பு கொண்டு அந்த இணைப்புகள் கிடைக்குமா என கேட்டேன். அவரும் உடனே அனுப்பி வைத்தார். அதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்தேன்.
விபாசன தியானம் எப்போது யாரால் கண்டுபிடிக்க பிடிக்கப்பட்டது, அது எப்படியெல்லாம் உருமாறி வளர்ந்து வந்துள்ளது, இந்தியாவில் இந்த முகாம் எங்கெல்லாம் இருக்கிறது, தியான முகாமில் தியானம் எவ்வாறு சொல்லி தரப்படுகிறது, அதன் தினசரி நடவடிக்கைகள் என்ன என்ன, அதை பின்பற்றும்போது உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்ன என்பதை மிகவும் சுவராசியாமாகவும் நகைச்சுவை உணர்வோடும் அதிஷா எழுதியுள்ளார்.
பதினெட்டு பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கும் இந்த தியான அனுபவ பதிவை படிப்பதே ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இது புத்தகமாக வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
இந்த பதிவுகள் ஒருவகையில் நம் அனுபவங்களை எப்படி எழுத்தாக மாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அதிஷாவின் எழுத்தில் எளிமையும் நகைச்சுவையும் தத்துவார்த்த சிந்தனைகளும் மிளிர்ந்தபடியே இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.

18.08.2025

துளி. 408

அதிர்ஷ்டத்தையும்

அற்புதத்தையும்

நம்பாதவன் அவன்

ஆனால் அவனையும்

இதையெல்லாம் எதிர்பார்க்க

வைத்துவிட்டது காலம்.

10.08.2025

7.31.2025

திரை.24 / Santosh



 

Santosh / Sandhya Suri / 2024 / Hindi
இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி. இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் இதற்கு முன்பு ஒரு குறும்படமும் இரண்டு ஆவணப்படமும் எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படம் அவரின் முதல் முழுநீள திரைப்படமாகும். உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ள திரைப்படத்தை இந்த அரசு தடை செய்துள்ளது. ஏன் தடை அதற்கான காரணம் என்ன..?
“சந்தோஷ்” திரைப்படத்தின் கதை சமகாலத்தில் நடக்கிறது. கதை நிகழும் களம் இந்திய ஒன்றியத்தியின் வடபகுதி. முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த கலவரத்தில் ஒரு காவலர் கல்லடிபட்டு இறந்து போகிறார். அந்த காவலர் இந்து மதத்தை சார்ந்தவர். அவரின் மனைவி சைனி சந்தோஷ் கருணை அடிப்படையில் காவலராக பணியில் சேருகிறார்.
காவலர் சைனிக்கு காவல்துறையின் கோர முகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகிறது. காவலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒருபக்க சார்பாக நடந்து கொள்வது, உயர் அதிகாரி காவலர்களை சொந்து வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, தலித் மக்கள் புகார் கொடுக்க வந்தால் அவர்களை ஏலனமாக நடத்துவது, ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவது என அவர் பார்க்கும் காட்சிகள் அவரை நிலையகுலைய வைக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளிவருகிறார்..? அல்லது அதை அவர் எப்படி உள்வாங்கி கொள்கிறார் என்பதே இப்படத்தின் முடிவாகும்.
இந்திய ஒன்றியத்தின் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது. அது தலித்துகளையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்துகிறது என்பதை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
இந்திய ஒன்றியத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் நிகழ்த்தப்படும் கொடுமைகளின் ஒரு துளியையே இப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது.
பலவகையான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட இந்த அரசுக்கு உண்மையை எதிர்கொள்வது சாத்தியமில்லைதான். அதனால்தான் இப்படத்துக்கு தடை விதிக்கிறது.

29.07.2025


துளி - 412

செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...