Santosh / Sandhya Suri / 2024 / Hindi
இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி. இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் இதற்கு முன்பு ஒரு குறும்படமும் இரண்டு ஆவணப்படமும் எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படம் அவரின் முதல் முழுநீள திரைப்படமாகும். உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ள திரைப்படத்தை இந்த அரசு தடை செய்துள்ளது. ஏன் தடை அதற்கான காரணம் என்ன..?
“சந்தோஷ்” திரைப்படத்தின் கதை சமகாலத்தில் நடக்கிறது. கதை நிகழும் களம் இந்திய ஒன்றியத்தியின் வடபகுதி. முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த கலவரத்தில் ஒரு காவலர் கல்லடிபட்டு இறந்து போகிறார். அந்த காவலர் இந்து மதத்தை சார்ந்தவர். அவரின் மனைவி சைனி சந்தோஷ் கருணை அடிப்படையில் காவலராக பணியில் சேருகிறார்.
காவலர் சைனிக்கு காவல்துறையின் கோர முகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகிறது. காவலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒருபக்க சார்பாக நடந்து கொள்வது, உயர் அதிகாரி காவலர்களை சொந்து வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, தலித் மக்கள் புகார் கொடுக்க வந்தால் அவர்களை ஏலனமாக நடத்துவது, ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவது என அவர் பார்க்கும் காட்சிகள் அவரை நிலையகுலைய வைக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளிவருகிறார்..? அல்லது அதை அவர் எப்படி உள்வாங்கி கொள்கிறார் என்பதே இப்படத்தின் முடிவாகும்.
இந்திய ஒன்றியத்தின் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது. அது தலித்துகளையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்துகிறது என்பதை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
இந்திய ஒன்றியத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் நிகழ்த்தப்படும் கொடுமைகளின் ஒரு துளியையே இப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது.
பலவகையான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட இந்த அரசுக்கு உண்மையை எதிர்கொள்வது சாத்தியமில்லைதான். அதனால்தான் இப்படத்துக்கு தடை விதிக்கிறது.
29.07.2025

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக