1.25.2018

அஞ்சலி . 01

ஞாநி எனக்கு பிடித்தமான பத்திரிகையாளர். அவருடைய ஓ பக்கங்கள்,தவிப்பு நாவல்,அவர் இயக்கிய நாடகங்கள்,கேணி சந்திப்பு, அவர் வரைந்த பாரதி ஓவியம், தீம்தரிகிட இதழ்,ஞானபாநு பதிப்பகம் மூலம் வெளியிட்ட நூல்கள், கோலங்கள் திரைப்பட இயக்கம், அவர் இயக்கிய குறும்படம், தொலைக்காட்சியில் அவர் வழங்கிய நூல் அறிமுகங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம் அவருடைய செயல்பாடுகள் பற்றி, அவருடைய வாசகனாக அல்லது பார்வையாளனாக அவரை தொடர்ந்துள்ளேன். அவருடைய பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை. சிலவற்றில் உடன்பாடில்லை.
கருத்தியல் சார்ந்து எனக்கு நெருக்கமாக உணர்ந்த ஆளுமையை இன்று மரணம் கொண்டு சென்றுவிட்டது. காலனை யாராலும் தவிர்க்க முடியாதுதான். ஆனால் கருத்தியலை பின் தொடர முடியும். ஞாநிக்கு செலுத்தும் அஞ்சலி என்பது அவர் சென்ற பாதையில் நாம் மேலும் பயணிப்பதாகவே இருக்க முடியும்.
இறுதி வணக்கம் ஞாநி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...