சா.ரு.மணிவில்லன்.
7.31.2018
துளி . 180
தேவதையின் மெல்லிய
புன்னகையை போல
சிறு மழைத்துளியை
தூவி செல்கிறது
அந்தி வானம்...
26.07.2018
வரி . 06
எவ்வளவு துயரங்கள் சூழ்ந்த போதிலும்
மனிதன் வாழவே எத்தனிக்கிறான்.
20.07.2018
துளி . 179
பெருத்த
அவமானத்திற்கு
பின்னும்
உன்னை
பின்தொடர்கிறேன்
அன்பே
உனது
பேரன்பிற்காக
மட்டும் ....
17.07.2018
துளி . 178
கடைசியாக யாரிடுவது
போட்டியில் நீள்கிறது
முத்த யுத்தம்...
06.07.2018
துளி . 177
கனவு
கனவில்
மேற்கு பார்த்த
வாசல் படியேறி
என் வீட்டின்
உள்ளே செல்கிறேன்
அம்மா என அழைத்தபடி
நிசத்தில் என்
வீட்டு வாசல்
தெற்கு திசை
நோக்கியுள்ளது...
தெற்கு வடக்காக
நீண்டு கிடக்கும்
எங்கள் தெருவில்
மேற்புறமாக மின்சார
கம்பங்கள் உள்ளன
கனவில்
கிழக்கு திசையில்
இருக்கிறது ஒளிதரும்
அந்த கல் மரங்கள்
ஒளியூட்டும் தேவதை
உனை நோக்கி
வரப்போகிறாள்
கனவுக்கு ஆருடம்
சொல்கிறார் நண்பர்
காதிருக்கிறேன்
கடும் கோடைக்கு
பின் வரும்
கார்காலத்திற்காக...
05.07.2018
வரி . 05
நீ சந்தோசமாக இருக்கும் எந்தவொரு கணமும்,
மற்றவருக்கு துயரம் தராமலிருந்தால்
அதுவே உண்மையான மகிழ்ச்சியாகும்.
02.07.2018
வரி . 04
வாசிக்காத நாளெல்லாம்
வாழாத நாளேயாகும்.
01.07.2018
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
துளி. 402
எல்லாவற்றையும் சரியாக செய்ய நினைத்து பிழைகளுடனே செய்து முடிக்கிறேன். 23.03.2025
துளி . 117
கனமழையிலும் கறையாதிருக்கிறது உன் நினைவுகள்... 05.11.2017.
பதிவு. 72.
முறிந்த பாலம் - தோர்ன்டன் ஒயில்டெர். தமிழில் - ரா.நடராசன். சமூக ஊடகங்களில் பயன்கள் பல. அவற்றில் ஒன்று சில நல்ல புத்தகங்ககளின் அறிமுகம் கிட...
சிறுகதை.1 ( மயக்கம்)
நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இர...