3.28.2019

துளி . 229

மகிழ்ச்சியை பரிமாற்றிக் கொள்ள 
தொடர்பு கொண்டால் 
தொடர்பு எல்லைக்கு 
வெளியே இருக்குறாய்
துக்கம் சூழ்ந்த
இரவில் உன்தோள்
சாயந்து அமைதிகொள்ள நினைத்தால் 
உன் தொடர்புஎண் 
துண்டிக்கப்பட்டு இருக்கிறது
இன்பம் துன்பம்
எதிலும் தொடர்பற்றிருக்க
எதற்கு இந்த உறவு
காலம் காலமாக
காலம் என்னை
நிலைகுலைய செய்கிறது
இப்போது நீயுமா அன்பே...
                                      - சாருமதி

                                                   02.03.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...