12.31.2024

பதிவு. 86

 புனைவு என்னும் புதிர் / உலகச் சிறுகதைகள்-2

விமலாதித்த மாமல்லன்.
விமலாதித்த மாமல்லனின் புனைவு என்னும் புதிர் புத்தக வரிசையில் இது நான்காவது புத்தகம். முதல் இரண்டும் உள்ளூர் சிறுகதைகள் குறித்தது. அடுத்த இரண்டும் உலகச் சிறுகதைகள் குறித்ததாகும்.
இந்த புத்தகத்தில் பன்னிரெண்டு சிறுகதைகளும் (ரேமண்ட் கார்வார், பீட்டர் ஹாக்ஸ், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ், சாதத் ஹாசன் மண்டோ, பீட்டர் பிஷெல், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், விளாதிமிர் நபகோவ், ஜாக் ஸ்டெய்ன்பெக் மற்றும் அகஸ்டோ மாண்டெரோஸா ஆகியோரின் படைப்புகள்) அவற்றிற்கான கட்டுரையும் இருக்கின்றது.
ஒரு சிறுகதை எப்படி எழுதப்பட்டு இருக்கிறது, எதனால் இது சிறப்பான இலக்கிய படைப்பாக இருக்கிறது என்பதை மிகவும் எளிமையாக விமலாதித்த மாமல்லன் விளக்கி செல்கிறார். அப்படி அவர் ஒவ்வொரு கதைகுறித்து விளக்கும்போதும் அது ஒரு சிறுகதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான பாடமாக மாறிவிடுகிறது. இதுவே இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.
இந்த புத்தகத்தினை “சத்ரபதி வெளியீடு” பதிப்பகம் வெளிட்டுள்ளது.

25.12.2024.

All reaction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...