4.30.2018

துளி . 165

அறுவடை முடிந்து
காய்ந்து நிற்கும்
பருத்தி மிளாறும் 
பற்றிக்கொள்ளுமோ
எனும்படி கொலுத்துகிறது
கோடை வெயில்

வெக்கை தாளாமல்
கருவேலம் மரநிழலில்
நின்று இளைப்பாறும் 
செம்மறியாட்டு மந்தையை
கடந்து செல்கிறது
கிராமத்து பேருந்து 
கொதிக்கும் தார்சாலையில்

சன்னலோரம் அமர்ந்திருந்தாலும்
ஆனந்தமாக இருக்கமுடியவில்லை
வீசும் அனல் காற்றால்
ஆனாலும்
இந்த பயணத்தை 
இனிமையாக்குகிறது
இளையராசாவின்
இன்னிசை பாடல்கள்...

                                      23.04.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...