9.03.2020

துளி - 301

 யார்..?!

மாநகரத்தின் பிரதான சாலை
முன்னிரவு நேரம்,
சாலையெங்கும் பரவியிருக்கும்
பொன்னிற ஒளியை கிழித்துக்கொண்டு
செல்கிறது வீடுதிரும்பும் வாகனங்களின் வெண்ணிற முகப்பு விளக்கொளி,
சாலை விதிக்கு கட்டுப்பட்டு சீரான இடைவெளியில் ஒன்றபின் ஒன்றாக வரிசையாக சில வாகனங்கள்,
மீறலையே விதியாக கொண்டு சீறி செல்லும் வாகனங்கள் பல,
சாலைக்கும் நடைமேடைக்கும் இடையே
மனப்பிறழ்வான ஒருவன் எதிர்திசையில் பயணிக்கிறான் பயமறியாமல்,
அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாதே என்று
பதறுகிறான் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவன்,
அழுக்கான உடையை சீரமைத்தபடி
அங்களின் தேவைக்கு ஏற்ப சொறிந்தபடி
பொருளற்ற பாடலை மகிழ்ச்சியோடு பாடியபடி சென்றவன் திடீரென தாவுகிறான் நடைமேடைக்கு,
எதிரே ஒருவன் இருசக்கர வாகனத்தை ஒரு கையால் இயக்கியபடி
மற்றொரு கையினால் காற்றில் கத்திசண்டையிட்டபடியே விரைந்து வருகிறான்,
பேருந்திலிருப்பவனுக்கு ஒரு சந்தேகம்
இந்த இருவரில் மனம் பிறழ்ந்தவர்கள் யார்...?!

01.08.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...