5.31.2018

துளி . 168

அவர்கள் மறுபடியும்
நிரூபித்திருக்கிறார்கள்
கொலைகாரர்கள் என்று

மக்களை காப்பேன்
என்று உறுதிமொழி
எடுத்துக்கொண்டு


மக்கள் வரிபணத்தில்
மாதச்சம்பளம்
பெற்றுக்கொண்டு

சட்டத்தின் ஆட்சியை
நிலைநிறுத்துவேன்
என்றவர்கள்தான்

சட்டத்துக்கு புறம்பான
வழிமுறைகளில்
சரியாக குறிபார்த்து
சுட்டுக்கொண்டார்கள்
தம் வாழ்வாதாரம் காக்க
அறவழியில் போராடிய
அப்பாவி மக்களை

சுயநல படுகுழியில்
வீழ்ந்த சுயமோகிகளை
அப்புறப்படுத்தும்
காலம் எக்காலமோ...

                                       22.05.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...