11.30.2018

அனுபவம்.01

முன்பொருகாலத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு நண்பர் அஜந்தன் அறையில் சில நண்பர்கள் ஒன்று கூடி விடியவிடிய அரசியல்,சினிமா,இலக்கியம் பற்றி கலந்துரையாடல் செய்வதுண்டு. சில நேரங்களில் விவாதமாக பல விசயங்களை கற்றுக்கொண்டும், பல நேரங்களில் வாதங்கள் அதிகாமாகி ஈகோ முட்டிக்கொண்டும் விடிந்ததும் பிரிந்து சென்ற அந்த நாட்கள் இன்றும் இனிமையான நினைவுகளாக எனக்குள்/எங்களுக்குள் இருக்கின்றன.
அப்படி நடந்த கூட்டம் ஒன்றில்தான் “பெரியார் ஒரு தத்துவவாதியா” என நண்பர் பாலாஜி கேட்டார். பல நண்பர்கள் ஆமாம் என பதில் சொன்னோம். அதற்கான விளக்கங்களை சொன்னோம். ஆனால் பாலாஜி எங்கள் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கோவமான நாங்கள் கேட்டோம் தத்துவவாதி என நீங்கள் யாரை சொல்வீர்கள். உடனே பாலாஜி சீனாவின் கான்ஃபூசியஸ் ஒரு தத்துவவாதி என்றார். நிறைய விளக்கங்களும் சொன்னார். எங்கள் குழுவில் அரசியல் சார்ந்து நிறைய வாசிக்க கூடியவர் என்பதினால் அவர் கூறியதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகத்தோடு பிரிந்து சென்றோம்.
இந்த உரையாடல் நடந்த கொஞ்சநாட்களுக்குள் பத்திரிக்கையாளர் ஞாநி வீட்டில் நடந்த கேணி கூட்டத்திற்கு தோழர் வ.கீதா பேசவந்தார். என்ன தலைப்பில் பேசினார் என இப்போது நினைவில்லை. ஆனால் பெரியார்,அம்பேத்கர் பற்றிதான் அதிகம் பேசினார். அப்போது நடந்த கலந்துரையாடலில் மேல கூறிய சம்பவத்தை விலக்கி விட்டு பெரியார் தத்துவாதியா என கேட்டேன். பெரியார் தத்துவவாதிதான் என உறுதிபட தோழர் வ.கீதா கூறினார். பத்திரிக்கையாளர் ஞாநியும் இதே கருத்தை ஏற்கனவே கூறியுள்ளதும் எனக்கு நினைவு வந்தது.
பெரியார் தத்துவவாதி என்பதனை நிரூபிக்கும் கட்டுரை ஏதும் வாசித்திருக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் ராஜன்குறை Rajan Kurai Krishnan பகிந்த ஒரு முகநூல் பதிவில் பெரியார் தத்துவாதிதான் என்பதை நிறுவும் கட்டுரையை வாசித்தேன். தமிழ் காமராசன்எழுதியுள்ள (சுமார் பத்து பக்கங்கள் கொண்ட) கட்டுரையில் இவ்வளவு தகவல்களா என வியந்தேன் நீங்களும் வாசித்து பாருங்கள். 
                                                                                                                     14.11.2108

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...