11.30.2018

திரை.04

பரியேறிய பெருமாள்
இந்திய ஒன்றியத்திலும், தமிழகத்திலும் சாதிய ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் பரியேறும் பெருமாளின் வருகை மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதிய பெருமிதம் பேசுபவர்களின் மனசாட்சியை தொட்டு கேள்வியை எழுப்புகிறது இப்படம். கதாநாயகனின் அவமானம் அவனுக்கு மட்டுமானது அல்லவே, அதற்காக மொத்த சமூகமும்தானே வெட்கப்பட வேண்டும். சாதியினால் பெருமையில்லை என்ற நிலை உருவாக வேண்டும். அதற்காக செய்ய வேண்டியது என்ன ஆணவ கொலைகளா இல்லை ஆன்மசுத்தியுடன் சகமனிதனை நேசிப்பதா, பழிவாங்குதலா இல்லை பரிசுத்த அன்பை பரிமாறுவதா. எண்ணிலடங்கா கேள்விகளை உருவாக்குகிறது பரியேறும் பெருமாள்.
மேசையின் மீது இரண்டு டீ குவளைகள், ஒன்று கறுப்பு டீ மற்றது பால் சேர்த்த டீ இருந்த குவளைகள் இவற்றுக்கிடையே ஒற்றை மல்லிகை பூ இருக்கும் இந்த பிம்பம் ஏற்படுத்தும் சிந்தனைகள் குறித்து மட்டுமே ஏராளமாக எழுதலாம்,பேசலாம். இதை ஒரு பிம்பமாக உருவாக்க தேவைப்படும் சமூக புரிதல் சாதாரணமானது அல்ல. இயக்குனர் மாரி செல்வராஜ் தன் முதல் பட்ததிலேயே முத்திரை பதித்துள்ளார். சமகாலத்தில் சாதி ஆணவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவூட்டும் காட்சிகள் கதைப்போக்கில் அங்க அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படம் ஒருவகையில் சமகால ஆவணமாகவும் உள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பாளராக இல்லையென்றால் இப்படம் வெளிவருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
பரியேறும் பெருமாள் படம் வெளியாகும் போது சென்னையில் இல்லாத்தினால் படத்தை உடனே பார்க்க வாய்பில்லாமல் போனது, சென்னை வந்தபின் பார்க்கலாம் என்றால் பெரும்பாலும் இரவு காட்சிகள் என்பதினால் பார்க்கவில்லை. ஒருவழியாக நேற்று இரவு அமேசான் பிரைமரில் பார்த்துவிட்டேன். இதை சாத்தியமாக்கிய நண்பர் நரேஸ்க்கு மிக்க நன்றி...

                                                                                                                  14.11.2108

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...