3.25.2022

பதிவு. 52

 தெருவென்று எதனைச் சொல்வீர்..? – தஞ்சாவூர் கவிராயர்.

சகோ… நீங்க குடுத்த தெருவென்று எதனை சொல்வீர் புத்தகத்த படிச்சிட்டேன்.
எப்டி இருக்கு ப்ரோ.
ரொம்ப நல்லாயிருக்கு.
ஆமாம் ப்ரோ. நான் ரொம்ப சீக்கரமாவே படிச்சிட்டேன். கொஞ்சம் நேரம்தான் படிச்சேன் அதுக்குள்ள பாதிப்புத்தகத்துல இருந்தேன்.
உண்மைதான் சகோ. அவருக்குன்னு ஒரு மொழி, வாசிக்க எளிமையாவும் சுவராசியமாவும் இருக்கு. அதுக்கு காரணம் அவர் பேசுற விசயங்களோட நம்மளால மிக எளிதாக இணைச்சுக்க முடியுது. தெருவ பத்தி பேசுனாலும், ரயில் பயணத்தப்பத்தி பேசுனாலும், கிராமம், நகரம், படித்தவர்கள், படிக்காதவர்கள், உள்நாட்டினர், வெளிநாட்டினர், கலைஞர்கள், சிட்டுக்குருவி, யுவர் மெஸ், காகம், குரங்கு என யாரப்பத்தி அல்லது எதைப்பத்தி எழுதினாலும் அதை உணர்வுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் எழுதுகிறார். உடனே அது நம்மள இழுத்துக்குது.
ஆமாம் ப்ரோ. அதுமட்டுமில்லாம… அவருக்கு நெறைய அனுபவம் இருக்கு பல விசயங்கள்ல..
உண்மைதான். அந்த அனுபவங்களை பிறர் ரசிக்கும்படியாகவும் இலக்கியதரமாகவும் எழுதவும் அவரால் முடிகிறது. ஒருவகையில் அவர் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றே தோன்றுகிறது. எனக்கு இந்த கட்டுரைகளிலேயே யுவர் மெஸ் நடத்திய தஞ்சை ப்ரகாஷ், நடிகை பானுமதி நினைவுகள், அதிசயத் தமிழர் வ.அய்.சுப்பிரமணியம், காந்தி ஆவணப்படம் எடுத்த தமிழர் ஏ.கே.செட்டியார், பெருநிலக்கிழார் ஏ.கே.இராமகிருஷ்ண ரெட்டியார், மீசை வாத்தியார், சூரியகாந்திப் பூக்களின் தோழர் இவையெல்லாம் வெறும் நினைவுகள் மட்டுமல்ல. உண்மைகளின் வரலாறு. மரமாக மாறிவிட்டான், இலக்கிய வானில் இரு எரிநட்சத்திரங்கள் இரண்டும் காவியசோகம் நிறைந்த கதைகள். வெளிநாட்டு மனிதர்களைப் பற்றிய பதிவுகள் அருமை. தமிழ் மொழியின்பால், கலாச்சாரத்தின்பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இங்கு வந்து சென்ற அல்லது இங்கேயே வாழ்கின்ற பல வெளிநாட்டு மனிதர்களின் குணநலங்களை புரிந்து கொள்வதே புதிய அனுபவமாக இருக்கிறது. ரொம்ப நன்றி சகோ.
ப்ரோ…
இந்த புத்தகத்த நீங்க சிபாரிசு பண்ணலன்னா படிச்சிருப்பேனான்னு தெரியல. தஞ்சாவூர் கவிராயர் பேர கேள்விப்பட்டிருக்கேன். முகநூல்ல சில கவிதைகள் படிச்சிருக்கேன். இப்போத்தான்.. உங்களால் அவருடைய புத்தகத்தத முதல் முறையாக படிச்சியிருக்கேன். மிக்க நன்றி சகோ.
இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் சிறப்பாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2016. மூன்றாம் பதிப்பு 2017.
20.10.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...