மறக்க முடியாத மனிதர்கள் – வண்ணநிலவன்.
இலக்கிய ஆர்வத்தினால் தான் சந்தித்து பழகிய இலக்கியவாதிகள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரைப்பட நடிகர்களில் சுமார் 19 ஆளுமைகள் குறித்த தன்னுடைய நினைவுகளை வண்ணநிலவன் இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
எழுபதுகளில் முகமறியா ஒருவருக்கு கடிதம் எழுதி அவர் பதில் தபால் எழுதினால் ஏற்படும் மகிழ்ச்சி என்பது இன்று வரலாறாகி போய்விட்டது. இலக்கியம் படிக்கும் பழக்கம் ஒருவனை எங்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வாசகன் படைப்பாளியாக மாறிய கதையும் இதில் இருக்கிறது.
எழுபது எண்பதுகளின் இலக்கிய போக்குகள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது. அன்றைய இலக்கியவாதிகள் இலக்கியத்தையும் மனிதர்களையும் எப்படியெல்லாம் நேசித்து இருக்கிறார்கள் என்ற உண்மை வரலாறும், சிறிய அளவில் அன்றைய சமூக சூழலையும் புரிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. 23.10.2021.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக