10.08.2022

பதிவு. 61

 எழுத்துக் கலை – விமலாதித்த மாமல்லன்.

இந்த புத்தகம் இணையத்தில் படைப்புகளை முன்வைத்து எழுதப்பட்ட எதிர்வினைகளின் தொகுப்பாகும்.
குறிப்பாக படைப்புகளில் மொழி எப்படி தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. படைப்பில் இருக்கும் தகவல் பிழைகள், வாக்கியத்தில் இருக்கும் தர்க்க பிழைகள் என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி அது எப்படி எழுத பட்டிருக்க வேண்டும் என்பதை எளிமையாகவும் தேவையான அளவுக்கு விளக்கமாகவும் எழுதி இருக்கிறார்.
எஸ்.ராவின் ஆடுகளின் நடனம் மற்றும் புர்ரா, வண்ணநிலவனின் எஸ்தர், யூ.மா.வாசுகியின் வேட்டை, ஜி.குப்புசாமி சார்வாகன் கதை தொகுப்பு எழுதிய முன்னுரை, அழகியசிங்கரின் கட்டுரை ஒன்று என நாம் அறிந்த, படித்து வியந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களில் உள்ள குறைகளை நிறைகளை மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளார். அது மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலை தருவதாக இருக்கிறது.
இந்த நூல் எழுத்துக் கலை சார்ந்து வாசகனின் புரிதலை இன்னும் கூடுதலாக்க உதவும் வகையில் எழுதியுள்ள ஆசிரியருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
சத்ரபதி வெளியீடு இந்த புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டுள்ளது. 03.10.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...