10.08.2022

பதிவு. 62

 முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.

முதல் பகுதியை படிக்கும்போது பெரும் குழப்பமாக இருந்த இந்த குறுநாவல் மூன்றாவது பகுதியை படிக்கும்போதுதான் பிடிபட தொங்கியது.
அவர்கள் அவனைக் கொல்ல இருந்த அன்று... என்று தொடங்கும் நாவலின் முதல் பகுதியில் கொலை செய்யப்பட்டவனின் வாழ்வையும், இரண்டாம் பகுதியில் கொலைக்கான காரணத்தையும், மூன்றாவது பகுதியில் கொன்றவர்களைப் பற்றியும், நான்காவது பகுதில் அந்த கொலைக்கான நீதி விசாரணை எப்படி நடந்தது என்பது பற்றியும் கூறிவிட்டு இறுதி பகுதியில்தான் அவன் எப்படி கொலை செய்யப்படுகிறான் என்று விளக்கப்படுகிறது.
அவனை கொல்லபோவதாக அவர்கள் பொதுவெளியில் பலர் முன்னிலையில் கூறுகிறார்கள். ஆனால் யாராலும் அவனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அவனை காப்பாற்றுவதாக நினைத்து ஒருவர் செய்த செயல் அவன் எளிதாக கொல்லப்பட காரணமாகி போய்விடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது. எல்லாம் விதி(ஊழ்) என்பது இதுதானோ. இந்திய மனதுக்கு நெருக்கமான சிந்தனை.
கொல்லப்பட்ட அவன் பல குற்றங்கள் செயதவந்தான். ஆனால் அவன் கொலை செய்யப்படுவதற்கு காரணமான குற்றத்தை அவன் செய்தான் என்று இக்கதையில் உறுதியாக சொல்லப்படவில்லை. உழைப்பு பலன் கிடைக்கும் என்று நம்புவதுபோல் செய்த குற்றத்திற்காக தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டுமோ.
அருமை செல்வமும் அசதாவும் சேர்ந்து நேரடியாக தமிழில் எழுதப்பட்டதை போன்ற நல்ல மொழிபெயர்ப்பை செய்துள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
காலச்சுவடு பதிப்பகம் உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்நாவலை சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டு உள்ளது. 07.10.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...