12.31.2022

பதிவு. 64

 சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேய.

சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னால் வங்கமொழியில் எழுத்தப்பட்ட நாவல் “சிப்பியின் வயிற்றில் முத்து”. இதன் ஆசிரியர் போதிசத்வ மைத்ரேய. இதை வங்கமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்நாவலின் முதல் பதிப்பு 1994 ஆண்டில் வெளியாகியுள்ளது.
இந்நாவலின் கதை நிகழும் காலம் அரை நூற்றாண்டு (1990-1950) காலமாகும். கதையின் பெரும்பகுதி இந்திய சுதந்திரத்திற்கு பிறகான முதல் ஐந்து ஆண்டுகள் காலகட்டமாகும். கதை மூன்று அடுக்குகளில் நடக்கிறது.
ஒன்று தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வு அவர்களின் பிரதிநிதியாக பீட்டர். இரண்டாவதாக கர்நாடக இசை மற்றும் நாட்டியம் சார்ந்த வாழ்க்கை முறை அவர்களின் பிரதிநிதியாக ராமன், மரகதம். மூன்றாவதாக நவ நாகரிகத்தின் அடையாளமாக அந்தோனி. இவன் லண்டனில் இருந்து தன் அப்பாவின் மரணத்தை ஒட்டி சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். அந்தோனியும் பீட்டரும் நண்பர்கள். பீட்டருக்கு கர்நாடக இசை மற்றும் நாட்டியத்தில் ஈடுபாடு இருக்கிறது. இக்கதை மாந்தர்கள் எல்லாரும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப் பட்டுள்ளார்கள்.
இந்தியா சுந்திரம் பெற்றால் எல்லாருக்கும் சுகம் வந்துவிடும் என்று நம்பியவர்களின் பிரதிநிதியாக பெரியவர் வெங்கி கதாபாத்திரம். அன்றைய கள்ள சந்தை, சுயநலத்துக்காக அரசியலை பயன்படுத்திக் கொண்டவர்கள் என எல்லோரையும் இந்நாவல் கவனப்படுத்துகிறது. பீட்டருக்கு இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அவ இருக்கிறது. அந்தோணி அதற்காக இங்கையே இருக்க வேண்டுமென விரும்புகிறான். அந்தோணிக்கு பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையை நெருக்கமாக பார்த்தப்பின் அவர்கள்மீது பரிவு ஏற்படுவதற்கு பதிலாக ஒவ்வாமையே ஏற்படுகிறது. பீட்டரின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பது நீண்ட கதையாக இருக்கிறது.
நாவலாசிரியர் வங்காளியாக இருந்த போதிலும் தமிழர்களின் வாழ்வை மிக நுட்பமாக கவனித்து எழுதியுள்ளார். ஆண்டாளின் பாசுரம், திருஞ்சான சம்பந்தரின் பாடல்கள், பாரதியின் கவிதைகள், திருநெல்வேலி, சிதம்பரம், தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் சிறப்புகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். பரதவர் என்ற சொல்லின் மூலம் எது என்றெல்லாம் கூட ஆராய்ந்துள்ளார்.
மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களின் பழக்க வழக்கங்களையும் கர்னாடக இசை மற்றும் பரத நாட்டியம் சார்ந்த நுட்பங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். மீன் பிடிப்பதையும் சங்கு எடுப்பதையும் இசைப்பதையும் நாட்டியம் ஆடுவதையும் நேர்த்தியான சொற்களால் சிறைப்பிடித்துள்ளார்.
நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போலவே சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டப்போது இந்த நாவல் பற்றி தெரிந்துக்கொண்டேன். இந்த நாவல் குறித்து அவர் பேசியதிலிருந்து இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அவருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 11.12.2022.

திரை. 13

 Fall

இரண்டு ஆயிரம் அடி உயரமுள்ள ரேடியோ டவரில் இரண்டு இளம் பெண்கள் ஏறி அதன் உச்சிக்கு செல்கிறார்கள். அங்கிருந்து இறந்துபோன ஒருவனின் சாம்பலை காற்றிலு தூவுகிறார்கள். உச்சியிலிருந்து கீழே இறங்க முயலும்போது ஏறி சென்ற ஏணிகள் கழன்று கீழே விழுகிறது. அந்த பெண்கள் தரையிரங்கி வந்தார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதையாகும்.
இறந்து போனவனுக்கும் அந்த பெண்களுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் டவரின் உச்சிக்கு சென்றது அவனின் சாப்பலை கரைக்கத்தானா, போன் சிகனல் கூட இல்லாத உச்சியில் இருப்பவர்கள் எப்படி, எதனால் யார் மூலம் தரைக்கு வரமுடியும் இந்த எல்லா கேள்விகளுக்குமான பதிலை மிகவும் சுவராசியமாக இப்படம் சொல்கிறது.
இரண்டாயிரம் அடி உயரத்தில் இரண்டு பெண்களின் உணர்வு போராட்டத்தையும், உயிர் வாழ்தலில் விருப்பத்தையும், உயிரை குடிக்க சுற்றி வரும் கழுகையும், மிக சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளார்கள். தகுதி உள்ளேதே தப்பிப்பிழைக்கும் என்ற டார்வினிய கோட்பாடு இங்கும் செயல்படுகிறது. அவர்கள் தப்பிப் பிழைத்தார்களா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். 27.11.2022.
May be an image of 1 person and sky

துளி. 354

எத்தனை எத்தனை இடர் வந்தபோதிலும் இலக்கை அடையாமல் ஓயமாட்டார்கள் இலக்கில் உறுதியாக இருப்பவர்கள். 26.12.2022.

துளி. 353

ஒடுக்கு முறை இருக்கும் வரை போராட்டம் இருக்கும்,

போராட்டம் இருக்கும் வரை
போராளிகள் இருப்பார்கள்,
போராளிகள் இருக்கும் வரை
மாவீரர்கள் போற்றப்படுவார்கள். 26.11.2022.

துளி.352

அற்புதமானது வாழ்க்கை அற்பத்தனத்தை ஆரம்பிக்காதவரை... 14.12.2022.

துளி. 351

போலிகள்.

நேசிப்பதைக் காட்டிலும்
நேசிப்பதாக காட்டிக்கொள்ள பிடிக்கிறது பலருக்கு... 14.12.2022.

பதிவு. 63

 மிஸ்டர் ஜீல்ஸீடன் ஒரு நாள் – டயான் ப்ரோகோவன் / ஆனந்த்.

நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்த துணையை சட்டென இழப்பதைப் போன்ற துயரம் வேறு ஏதுமில்லை. ஆனால் வாழ்வு என்பதே துயரங்களின் தொகுப்புத்தானே. துக்கத்தின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால் துயரப்படாத மனிதன் என்பவன் யாருமில்லையே. மரணம் சில நேரங்களில் தீரா துயரத்தை தருகிறது. சில நேரங்களில் அன்பை பெருக்குகிறது. சில நேரங்களில் உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கிறது. சில நேரங்களை மன்னிப்பை வழங்குகிறது.
ஜீல்ஸீம் ஆலீஸ் அம்பது வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருபவர்கள். பனிப்பொழியும் காலையில் குளிருக்கு இதமாக போர்வையை இழுந்து போர்த்திக்கொண்டு தூங்கிய ஆலீஸ், சமையலையில் கணவர் காபி தாயாரிக்கும் மணத்தை நுகர்ந்து கண்விழித்து சற்றுநேரம் அப்படியே படுத்து இருந்துவிட்டு, காபி குடிக்க ஹாலுக்கு வந்த ஆலீஸ், ஷோபாவில் உட்கார்ந்து இருக்கும் ஜீல்ஸீக்கு அருகில் அமர்ந்து அவரோடு பேச தொடங்குகிறார். ஜீல்ஸீ உட்கார்ந்த நிலையிலேயே மரணம் அடைந்து இருக்கிறார் என்பது ஆலீஸ்க்கு சற்று நேரம் கழித்துத்தான் தெரிகிறது. கணவரின் மரணத்தை வெளியில் யாருக்கும் சொல்லாமல் ஆலீஸ் ஒருநாள் முழுக்க ஜீல்ஸின் உடலோடும், அவரின் நினைவோடும் வாழ்வதை சொல்வதே இந்த நாவலின் கதைச் சுருக்கமாகும்.
இந்த கதையில் டேவிட் என்று ஒரு சிறுவன் வருகிறான். அவன் ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை. அவன் தினந்தோறும் ஜீல்ஸிடன் செஸ் விளையாடுபவன். ஆலீஸ் ஜீல்ஸின் மரணத்தை யாருக்கும் தெரிவிக்காமல் இருக்கும் சூழலில் டேவிட் அங்கு வருகிறான். ஜீல்ஸின் மரணத்தை டேவிட் எப்படி எதிர்கொள்ள போகிறான் என ஆவலாக பார்த்திருக்க, அவன் அதை மிக சாதுரியமாக கையாளுகிறான். குழந்தைகள் பெரியவர்களாகும் தருணத்தை டயான் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி எழுதியிருக்கிறார்.
கதை நிகழும் காலம் ஒரே நாள். பிரதான கதாப்பாத்திரங்கள் இரண்டே இரண்டு பேர். சுமார் அறுபது பக்கங்களில் ஆலீஸின் வாழ்வை அல்லது ஜீல்ஸின் கதையை டயான் மிகச்சிறப்பாக சொல்லியுள்ளார். இதற்குள் ஆண் பெண் உறவு சார்ந்த சிக்கல்கள், பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறுவுகள், முதுமையின் தனிமை, இளமையின் காதல், திருமணம், கருச்சிதைவு, குழந்தை வளர்ப்பு, வேலை, துரோகம் என எல்லாமே சுருக்கமாகவும் சுவையாகவுமாக, ஒரு நீண்ட வாழ்வு சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆனந்தின் மொழிப்பெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த நாவலை நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் சிறப்பாக வெளிட்டுள்ளது.
ஆகாஷ் ஆனந்தின் அட்டைப்படம் அருமையாக இருக்கிறது. நாவலிம் கருப்பொருளை அட்டைப்படம் பிரதிபலிக்கிறது.
இந்த நாவலை படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த எங்கள் இயக்குனர் பாலாஜி தரணிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
10.10.2022.

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...