2.29.2024

துளி. 389

தீராத் துயரம்.
உதிப்பதும் உதிர்வதும்
உயிர்களுக்கு மட்டுமல்ல
உறவுகளுக்கும் உண்டு.
நம்பிக்கை வைக்கையில்
ஓர் உறவு தோன்றுகிறது
நம்பிக்கை இழக்கையில்
ஓர் உறவு உதிகிறது.
நம்புவதும் நம்பாமல் போவதும்
அவரவர்
உள்ளுணர்வு சார்ந்தது
உள்ளுணர்வை மறுபதற்கில்லை
ஏனெனில்
அதுவே அவரவர்
பாதுகாப்பு அரண்
அரணை மீறினால்
மரணம் உறுதி.
எதன் பெயரால் நிகழ்ந்தாலும்
பிரிவு துயரத்தையே பரிசளிக்கும்.  - 18.02.2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...