2.29.2024

பதிவு. 80

 அநாமதேயக் கதைகள் – மயிலன் ஜி சின்னப்பன்.

இரண்டாயிரத்துக்கு பிறகு எழுத வந்த படைப்பாளிகளின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற தேடலில் அண்மையில் படித்த புத்தகம் அநாமதேயக் கதைகள். இந்த சிறுகதை தொகுப்பை எழுதியவர் மயிலன் ஜி சின்னப்பன். இதற்கு முன் இவருடைய படைப்புகள் எதையும் படித்ததில்லை. இவர் 2017-ல் எழுத தொடங்கியுள்ளார். மிகவும் குறுகிய காலத்திலேயே ஒரு நாவல் மற்றும் இரண்டு சிறுகதை தொகுப்புகளை கொண்டுவந்துள்ளார்.
இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகள் இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் சுமார் 15 முதல் 20 பக்கங்கள் வரையுள்ளது.
தொழில் சார்ந்து புதிய வெளியில் சந்திக்கும் மனிதர்களுக்கிடையேனா முரண்கள், ஆண் பெண் உறவில் இருக்கும் சிக்கல்கள், தொழில் சார்ந்த இடங்களில் வெளிப்படும் சாதிய உணர்வுகள், ஆண் பெண் மற்றும் இரண்டு ஆண்களுக்கு இடையே ஏற்படும் உளவியல் கோளாறுகள், மருத்துவமனைக்குள் நோயாளிக்கும் மருத்துவருக்குமான உறவுகளில் ஏற்படும் நெகிழ்ச்சியாண தருணங்கள் அல்லது இயலாமையின் வெளிப்பாடுகள் என பலவகையான உள்ளடக்கத்தை கொண்ட கதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது.
மயிலன் ஜி சின்னப்பனின் மொழிநடை படிக்க சுவராசியம் மிக்கதாக இருக்கிறது. எளிமையான மொழியில் தான் சொல்லவந்த விசயத்தை சிறப்பாக சொல்லிவிடுகிறார். மருத்துவம், ரியல் எஸ்டேட், மனித உளவியல் என எந்த துறை சார்ந்த கதையை எழுதினாலும் அந்த துறை சார்ந்த மிகவும் நுட்பமான தகவல்களுடன் எழுதியுள்ளார்.
மயிலன் ஜி சின்னப்பனின் படைப்புகளின் சிறப்பை விளக்கி கவிஞர் பெருந்தேவி “உணர்வுகளை எழுத்தில் இசைத்தல்” என்ற தலைப்பில் ஒரு சிறுகட்டுரையை முன்னுரையாக எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தினை தமிழினி பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2021-ல் வெளியாகியுள்ளது. - 12.02.2024.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...