2.29.2024

பதிவு. 79

 ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி.

டிஸ்கவரி புத்தக கடையில் இருக்கும் பிரஞ்சன் அரங்கத்தில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்பில் அறிமுகமானார் நண்பர் விஜய் மகேந்திரன். இவர் எழுத்தாளர் என்று மட்டும் நினைத்திருந்தேன். கடல் பதிப்பகத்தின் உரிமையாளரும் இவர்தான் என்பது பிறகுதான் தெரிந்தது. சென்ற மாதம் திடீரென ஒருநாள் உங்கள் முகவரியை அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகிறேன் என்றார். முதலில் தயங்கினாலும் அவர் வற்புறுத்தலுக்கு இணங்கி முகவரியை அனுப்பி வைத்தேன். மறுநாளே ஐந்து புத்தகங்கள்(நான்கு கவிதை தொகுப்பு மற்றும் ஒரு நாவல்) அனுப்பி வைத்தார்.
எனக்கு கவிதைகளை விட நாவல் பிடிக்கும் என்பதினால் முதலில் நாவலை படிக்க தொடங்கினேன். நாவலின் பெயர் ஹமார்ஷியா. இதை எழுதியவர் கண்ணன் ராமசாமி. இந்த பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நாவலின் தலைப்புக்கு பொருள் என்னவாக இருக்கும் ஆர்வத்துடன் நாவலைப் படிக்க தொடங்கினேன்.
இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற கனவு எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துபவர்கள் மிகச்சிலரே. அந்த சிலரும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அந்த எண்ணங்களுக்கு கலைவடிவம் கொடுப்பவர்கள் மிகவும் சிலரே இருப்பார்கள். கண்ணன் ராமசாமி எழுதியுள்ள ஹமார்ஷியா நாவல் அந்த வவையில்தான் இருக்கிறது.
போர் இல்லாத உலகை, மக்களுக்கான அரசை கனவு காணதவர்கள் யார் இருக்கமுடியும். இவ்வளவு தீவிரமான சிந்தனையை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு நிறைவேற்றினால் எப்படி இருக்கும் என்பதை மிகவும் எளிமையாகவும் அதே சமயம் விறுவிறுபான கதையாகவும் எழுதியுள்ளார் கண்ணன் ராமசாமி.
மனிதனின் புத்திசாலித்தனம் மானுடத்தின் மேன்மைக்கு பயன்படுத்த எத்தனிக்கும் கதைமாந்தர்களை உருவாக்கி உலவ விட்டுள்ளார். நாவலின் தலைப்புக்கான பொருள் மிகவும் ஆழமானதாகவும் அர்த்தம் மிகுந்ததாகவும் இருக்கிறது. இந்த நாவலின் கதைக்களம் புதுமையும் புத்திசாலிதனமும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
விஜய் மகேந்திரனின் கடல் பதிப்பகம் இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2022-ல் வெளியாகியுள்ளது.
இந்த நாவலை அறிமுகப்படுத்தி படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த நண்பர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


- 09.01.2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...