6.30.2018

பதிவு . 08


நான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலை அண்மையில் வாசித்தேன்.
எழுத்து பத்திரிகையில் 1959-1960 காலக்கட்டத்தில் தொடராக வெளிவந்த நாவல் இது. இப்போது வாசிக்கும் போது நாவல் உயிர்ப்புடன் உள்ளது.
இளம் விதவை பெண்ணான சாவித்திரியின் மனவோட்டமாக கதை சொல்லப்படுகிறது.
குடும்ப உறவுகளைவிட பணம்தான் பிரதானம் என்னும் வாழ்க்கையை பெரும்பாலான மனிதர்கள் தேர்வு செய்யும் இன்றைய சூழலில் பணத்தை விட உறவுகள் முதன்மையானது என வாழ்ந்த சாவித்திரியின் குணம் அல்லது கதை இன்றும் பொருத்தமான ஒன்றாக உள்ளது.
நாவலுக்கு சி.சு.செல்லப்பா எழுதியுள்ள முன்னுரை ஒரு படைப்பை உருவாக்க படைப்பாளன் எந்த அளவுக்கு மெனக்கிட வேண்டும், பொறுமை காக்க வேண்டும் என்பதனை சொல்லும் கையேடாக உள்ளது.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலுக்கு பெருமாள் முருகன் ஒரு சிறப்பான முன்னுரையும் வழங்கியுள்ளார்.

                                                                                              09.06.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...