6.30.2018

பதிவு . 10

மரம் - ஜீ.முருகன்
நவீன வாழ்க்கை மனிதனுக்கு பல வசதிகளை கொண்டு வந்தது போலவே பல நெருக்கடிகளையும் கொண்டு வந்ததுள்ளது. ஜீ.முருகன் எழுதியுள்ள "மரம்" நாவலும் அதைத்தான் பதிவு செய்துள்ளது.
எல்லா வகையான மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் பாலியல் இச்சைகளை அதன் சரி தவறுகளுக்கு அப்பால் நின்று
இந்நாவல் விவாதிக்கிறது.
அரசியல், ஆன்மீகம்,குடும்ப உறவுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் போலிகளையே தரிசிக்க வேண்டியுள்ளதை, இந்த நவீன வாழ்க்கையின் சில ஆண்களின் கதையையும், சில பெண்களின் கதையையும் சொல்வதின் மூலம் பதிவு செய்துள்ளார். சிறப்பான வாழ்வை சிக்கலாக்குவதுதான் மனிதனின் சிறப்பு இயல்பு போலும். ஜீ.முருகன் எளிய மொழியில் வலியான வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.
மரம் நாவலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் 2007-ல் சிறப்பாக வெளியிட்டுள்ளது.

                                                                                                                                24.06.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் பார்த்த படங்கள் - 2025

  நான் பார்த்த படங்கள் - 2025 சனவரி: 01. 2024 - Max – Vijay Karthikeyaa – Kanndam. 02. 2024 – Emilia Perez – Jacques Audiard – Spani...