10.12.2021

பதிவு - 45

 சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட காதல் காவியமான சரத் சந்தரின் தேவதாஸ் நாவலை அண்மையில் படித்து முடித்தேன். ரோமியோ ஜீலியட், அம்பிகாவதி அமராவதி போல் ஒன்று சேரதாத காதலர்களான தேவதாஸ் பார்வதியின் கதை இது.

பார்வதியின் கதாபாத்திரம் மிகவும் துணிச்சல் மிக்க பாத்திரம். அவள்தான் தன்காதலை தேவதாஸிடம் நேரடியாக சொல்கிறாள். அப்பா, அம்மாவின் ஆசைக்காக தேவதாஸ் பாருவின் காதலை நிராகரிக்கிறான். அவளை விட்டு பிரிகிறான். பிரிவின் துயரில்தான் அவளை எவ்வளவு காதலிக்கிறோம் என்பது அவனுக்கே புரிகிறது. அவன் திரும்பி பாருவிடம் வரும்போது காலம் கடந்து விடுகிறது. ஒருமுறை தவறான முடிவு எடுத்ததினால் அவனின் வாழ்வே பாழாகிறது. இந்த தவறுகளை இன்றும் மனிதர்கள் சாதிக்காக, மதத்துக்காக, பணத்துக்காக என்று செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதலின் துயரத்தில் வீழ்ந்த தேவதாஸ்மீது காசுக்காக காமத்தை விற்கும் சந்திரமுகி காதலில் விழுகிறாள். தன்னை தேடி வருவதினாலே அதன் அருமை தெரியாத தேவதாஸ் மறுபடியும் ஒரு தவறான முடிவை எடுத்து சந்திரமுகியை விலகி செல்கிறான். இப்போது சந்திரமதி காதலின் துயரில் வீழ்கிறாள்.
தேவதாஸ் படித்த பணக்கார வீட்டுப்பிள்ளை. அதனாலேயே அவன் வாழ்வில் பிரச்சனைகள் குறுக்கிடுகின்றன. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சிந்தனைவலிமை இல்லாத தேவதாஸ் சிக்கலில் சிக்கி சீரழிகிறான். பாருவின் காதலையும், சந்திரமுகியின் காதலையும் சரியாக புரிந்து கொள்ளமுடியாத தேவதாஸ் கடைசியில் ஓர் மழைநாள் இரவில் பார்வதியின் வீட்டு முன்பு மரணித்து போகிறான்.
தேவதாஸ் என்றாலே கூடவே ஒரு நாய் என்ற தோற்றம் மனதில் தோன்றும். இந்த கதையில் அப்படி ஒரு நாயே கிடையாது. திரைப்படம் உருவாக்கிய பிம்பம் போலும் நாய். ஏன் நாயை தேர்ந்து எடுத்தார்கள் என்றும் நன்றி மறவாத சீவன் அது என்பதினாலா...
இந்த தேவதாஸ் கதையை தழுவி இரண்டு இந்தி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று ஷாருக்கான், ஐஸ்வரியா, மாதுரி தீட்சித் நடித்த தேவதாஸ் படம். பிரமாண்டமான தயாரிப்பு. மற்றொன்று இயக்குனர் அனுராக் காஷ்பின் "தேவ் டி" படம். எளிமையான ஆனால் மிகவும் நவீனத்துவ பார்வைக் கொண்ட படம். பழைய கதையை சமகாலத்திற்கு ஏற்றார்போல் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமான படம். இந்த படமே என்னை மிகவும் கவர்ந்தது.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ள பழைய தேவதாஸ் படங்களையும் பார்க்க வேண்டும்.

08.05.2021.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...