7.31.2020

துளி . 295

மிளிரும் அறை
காலை எழும்போதே
மனம் புத்துணர்ச்சியாகயிருந்தது,
என்னென்ன செய்யலாமென
திட்டமிட தொடங்கியபோது கண்ணில்பட்டது படுக்கையை சூழ்ந்திருந்த தூசிபடலம்
கூடவே அடியிழந்த முடிகளும்.
சட்டென எழுந்து படுக்கையை சுருட்டி வெளியில் வெயில்காய வைத்தேன்.
துடப்பம் கொண்டு தூசிகளை பறக்கவிடாமல் பெருக்கி குப்பைத்தொட்டியில் அள்ளிப்போட்டேன்.
இரண்டு நாட்களாக குளியலறையில்
குடியிருந்த துணிகளை அலசி அறைக்கு வெளியே கொடியில் போட்டேன்.
நீண்ட நாட்களாக காய்ந்து கிடந்த மாப்பு கட்டையை எடுத்து பக்கெட் தண்ணீரில்
நனைத்து அறையிங்கும் தவழவிட்டேன்.
மறுபடியும் டெட்டால் கலந்த தண்ணீரில் நனைத்து தவழவிட்டேன் மாப்பை.
காற்றாடியை சுழலவிட்டுவதற்கு
முன்பாக கொளுத்தி வைத்தேன் முன்பொருகாலத்தில் பார்வையில்லாதவரிடம் வாங்கிய
சந்தன அதர்பத்தியை.
சன்னலை திறந்து வைத்தேன்
சூரிய ஒளியில் மிளிரும் அறை என்னுடையதுதானா
சந்தேகம் எனக்கே தோன்றியது.


எவ்வளவு நன்றாக இருக்கும்
இந்த அறையை
சுத்தபடுத்தியதுபோல்
மன அறையை எளிதில்
சுத்தபடுத்த முடிந்தால்.

27.06.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...