7.31.2020

பதிவு . 38

ஆண்டோ எனும் மாயை - இரா.பாரதிநாதன்.
இரா.பாரதிநாதனின் தறியுடன் நாவலை வாசித்தப்பின் அவருடைய மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
அந்தத் தேடலில் அடுத்ததாக எனக்கு வாசிக்க கிடைத்தது "ஆண்டோ எனும் மாயை" சிறுகதை தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள் உள்ளன.
நெசவு, விவசாயம், தென்னை மரமேறுதல், முடித்திருத்துவோர் மற்றும் பாலியல் தொழில் சார்ந்த தொழிலாளர்கள்தான் கதைமாந்தர்கள். அவர்களில் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்களே அதிகம். அவர்களின் வாழ்க்கை பாடுகளை, அவர்களின் நற்குணங்கள் மற்றும் அறியாமைகள் என அனைத்தும் இக்கதைகளில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
இந்த தொகுப்பின் சிறந்தக் கதையாக தோழர் சிறுகதையைக் கூறுவேன். பலவிதமான மனிதர்கள் சந்திக்க வாய்ப்புள்ள இடம் காவல் நிலையம். அங்கு ஒரு மக்கள் நல போராளியும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பார்வையில் மற்றவர் எப்படி தென்படுகிறார். அவர்களின் உறவு எதுவரை. அவர்களின் சமூகப் புரிதல் என்ன. இப்படியான பல கேள்விகளைத் தூண்டி பதில் தேடும் கதை. மிகவும் சுவாரசியமான கதையாகும்.
இக்கதைகளை மிகவும் எளிமையாக, அனைவரையும் கவரும்வண்ணம் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்த நூலின் முதல் பதிப்பை 2017-ல் களம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூல் வாசிப்பை சாத்தியமாக்கிய தோழர் இரா.பாரதிநாதனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
11.07.2020.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...