7.31.2020

துளி . 297

நம்பிக்கை
ஒருபோதும் என்னை
நீ பிரிந்து செல்லமாட்டாய் என
மூடநம்பிக்கையோடு இருந்தேன்
முன்பொரு காலத்தில்,
பிரிவு என்பது
வாழ்வின் ஓர் அங்கம் என
புரியவைத்தாய் பிரிதொரு சமயம்,
கொடும்துன்பத்தின் போதும்
தன்னை காக்காத கடவுளை
நம்பும் பக்தனைபோல்
நம்பிக்கையோடு இருக்கிறேன்
உனது பேரன்பு மட்டுமே
என்னை வாழவைக்கும் என்று...

07.07.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...