7.31.2020

துளி . 297

நம்பிக்கை
ஒருபோதும் என்னை
நீ பிரிந்து செல்லமாட்டாய் என
மூடநம்பிக்கையோடு இருந்தேன்
முன்பொரு காலத்தில்,
பிரிவு என்பது
வாழ்வின் ஓர் அங்கம் என
புரியவைத்தாய் பிரிதொரு சமயம்,
கொடும்துன்பத்தின் போதும்
தன்னை காக்காத கடவுளை
நம்பும் பக்தனைபோல்
நம்பிக்கையோடு இருக்கிறேன்
உனது பேரன்பு மட்டுமே
என்னை வாழவைக்கும் என்று...

07.07.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...