3.24.2018

திரை . 02

சென்ற வாரம் சவரக்கத்தி படம் பார்த்தேன். எனக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால் "ஏ தங்கக்கத்தி வெள்ளிக்கத்தி செம்புக்கத்தி இரும்புக்கத்தி சவரக்கத்தி ஈடாகுமா" பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தினம் இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்கிறேன், பலவித முகங்களை வைத்து காட்சிப்படுத்தப்பட்ட விதம் பற்றி வியக்குறேன். இணையத்தில் ஒரு வருடம் முன் பதிவேற்றம் செய்துள்ள இப்பாடலை இவ்வளவு காலதாமதமாக பார்க்க நேர்த்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.
இப்பாடல் எனக்கு ஒரு உலக சிறுகதையை நினைவூட்டுகிறது. அரசுக்கு எதிராக போராடும் போராளிகளை வேட்டையாடும் வேலைக்கு வந்துள்ள இராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி ஒருவன், போராளிகளின் ஆதரவாளர் என அறியப்பட்ட ஒரு சிகையலங்கார தொழிலாளியிடம் முகச்சவரம் செய்துக்கொள்ள வருவான். வந்திருப்பவன் யார்யென தெரிந்தும் அந்த சிகையலங்காரம் செய்யும் தொழிலாளி அவனுக்கு முகச்சவரம் செய்ய தொடங்குவார், அந்த அதிகாரியை தன் சவரக்கத்தியால் தொழிலாளி கொலை செய்ய போகிறாரா இல்லை அழகுப்படுத்தி அனுப்ப போகிறாரா என எதிர்பார்ப்புடன் செல்லும் வகையில் அந்த சிறுகதை எழுதப்பட்டிருக்கும்.
இந்த பாடலின் இடையில் வரும்
"கத்தி எதுக்குதான் தொப்புள் கொடி வெட்டத்தான்" வரியை மறுபடியும் மறுபடியும் நினைத்து பார்க்கிறேன். அது பலவிதமான சிந்தனைகளை தூண்டுகிறது. அந்த சிறுகதையிலும் அந்த சிகையலங்காரம் செய்யும் தொழிலாளி அந்த அதிகாரியை அழகுபடுத்தியே அனுப்புவார்.

 17.03.2018
YOUTUBE.COM
Song : Thangakathi Film : Savarakathi Year : 2016 Lyrics : Mysskin Music Director : Arrol Corelli Direction : G.…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...