3.31.2018

பதிவு . 06


புத்தக விளம்பரம் வரும்போதே இதை வாசித்துவிட வேண்டும் என நினைத்த ஒரு புத்தகத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் வாசித்து முடித்தேன். தமிழில் நிறைய திரைக்கதை புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவையெல்லாம் பெரும்பாலும் நாம் பார்க்கும் படத்தின் எழுத்து வடிவமாகவே இருக்கும். அந்த படம் உருவான விதம் பற்றிய தகவல்கள் இல்லாமலே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபடும் நூல் மிஷ்கினின் ’’ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – திரையாக்கமும் திரைக்கதையும்’’.
மிஷ்கின் இந்த புத்தகத்தில் முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சிவரை ஒவ்வொருக்காட்சியையும் எப்படி எழுதினேன், எப்படி படமாக்கினேன் என்பதை தெளிவாக விளக்கி சொல்லியுள்ளார். ஒருக்காட்சியில் நடிகனை ஏன் அங்கு நிற்கவைத்தேன், ஏன் அதுமாதிரியான உடல்மொழியை செய்ய சொன்னேன், ஒரு நடிகன் இயக்குனர் எதிர் பார்க்கும் நடிப்பை வெளிப்படுத்த எப்படி இயங்க வேண்டும், குழந்தைகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நடிப்பை எப்படி வெளிக்கொண்டு வருவது, அந்த கதாபாத்திரத்துக்கு ஏன் அந்த பெயரை வைத்தேன், கதாபாத்திரத்தின் உளவியலுக்கும் செயலுக்கும் உள்ள உறவு என்ன, படபிடிப்புதளத்தில் ஏற்படும் எதிர்பாரா இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என நேரில் உரையாடுவது போலவே எளிமையாக எழுதிசெல்கிறார்.
ஒரு காட்சியை விளக்கும் போது அந்த காட்சியின் தன்மையையோடு கூடிய தன் சொந்த கருத்துக்களையும், அந்த காட்சி மற்ற இயக்குனர்களிடமிருந்து எப்படி மாறுபடுகிறது என்றும் கூறுகிறார். இடையிடையே தன் ஆசான்கள் யார் யார் , அவர்களின் எந்த எந்த கருத்துகளோடு உடன் படுகிறேன், எதில் மாறுபடுகிறேன் என்பதையும் பதிவு செய்கிறார். ஒரு உதவி இயக்குனர் எப்படி சினிமாவைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் கூறுகிறார்.
ஒரு சின்ன வசனத்தின் மூலம் எப்படி அரசியலை விமர்சிக்கிறேன், ஒரு சொல்மூலம் எப்படி என் பேரன்பை வெளிப்படுத்துகிறேன். பார்வையாளனுக்கு புரியாது என்று உடனிருப்பவர்கள் கூறும்போது அதை எப்படி எதிர்கொண்டேன் என தன் அனுபவங்களை முன் வைத்து விளக்குகிறார். இந்த புத்தகத்தின் மூலம் மிஷ்கினை பற்றியும் அவரது திரைப்பார்வை என்ன என்பது பற்றியும் இன்னும் நெருக்கமாக புரிந்துக்கொள்ளமுடிகிறது.
தமிழ் ஸ்டியோவின் உப அமைப்பான பேசாமொழி பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்நூலை வாசிப்பதற்கு முன்பு புத்தகத்தின் விலை அதிகமென தோன்றியது, வாசித்தப்பின் அந்தவிலை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
குறிப்பு :
1. புத்தகத்தின் விலை காரணமாகவே வாங்குவது தள்ளிக்கொண்டேபோனது. நல்வாய்ப்பாக இந்த புத்தாண்டு இரவு ப்யூர் சினிமா அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கையால் இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது, அதற்கு காரணமான தமிழ் ஸ்டியோ அருணுக்கும், நல்ல சினிமா வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக நூலுக்கான பணத்தை கொடுத்து தன் பெயரைக்கூட வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத அந்த வெளிநாட்டு வாழ் நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
2. இந்த நிகழ்வில் மிஷ்கினின் ஐந்து திரைக்கதை நூல்கள் பத்து நபர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. நூல்களுக்கான பணத்தை வெளிநாட்டுவாழ் நண்பர் கொடுத்தார். பயனாளிகளை அருண் தேர்வு செய்தார்.

                                                                                                                                                                                                                             

26.03.2018


1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...