1.31.2019

துளி . 206

ஆசையோடு
பார்ப்பவனை
அவதிக்குள்ளாக்குகிறது
தேவதையின்
மேலாடையெங்கும்
பூக்களாக
தியானத்தில் இருக்கும்
புத்தனின் முகம்
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்றவனை
எப்படி எதிர்கொள்ளவான்
அத்தனைக்கு
ஆசைபட சொல்லும்
காலத்தில் வாழ்பவன்

                                   02.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...