1.31.2019

துளி . 209

அவன்.1
ஆளரவமற்ற நடுசாமாத்தில்
சீமையோடுகள் வேய்ந்த
வீட்டில் மெல்ல இறங்குகிறது
மார்கழி மாத பனி
தேவதையின் பேரன்பை போல
மின்விசிறி காற்றில்
அலைந்து திரியும்
குளிரை இழுத்தணைத்து
போத்திக்கொண்டு உறங்க
முயல்கிறான் அவன்
கனவிலேனும் தேவதைகள்
வருவார்களா என்ற
ஏக்க பெருமூச்சுடன்
அறையை தங்கள்
இன்னிசையால் அலங்கரிக்க
தொடங்கின கொசுக்கள்

                                              12.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...