8.16.2022

பதிவு. 57

 விளக்கும் வெளிச்சமும் – விமலாதித்த மாமல்லன்.

2 சிறுகதைகள் + 2 நெடுங்கதைகள் + 2 குறுநாவல்கள் = ஒரு நாவல்.
விமலாதித்த மாமல்லன் இந்த பெயரை பல வருடங்களாக கேள்விப்பட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் இவருடைய படைப்புகள் எதையும் படித்திருக்கவில்லை. பிறகு தேடிப்பார்த்ததில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் சிறந்த நூறுகதைகளில் இவருடைய “சிறுமி கொண்டுவந்த மலர்” சிறுகதை படிக்க கிடைத்தது. அதைப் படித்ததும் இவரின் மற்ற படைப்புகளை படிக்க நினைத்து படிக்காமலே இருந்தது. இப்போது 2 சிறுகதைகள், 2 நெடுங்கதைகள் மற்றும் 2 குறுநாவல்கள் அடங்கிய விளக்கும் வெளிச்சமும் தொகுதியை படித்து முடித்தேன்.
ஆறு தனித்தனியான கதைகள் மூலம் ஒரு மனிதனின் அறுபது ஆண்டுகால வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அந்த மனிதன் சந்தித்த அவமானங்கள், அவன் பெற்ற வெகுமானங்கள் என அனைத்தையும் கூறுகிறார்.
அவனுக்கு ஊர் சுற்ற பிடிக்கும், சைக்கிள் ஓட்ட பிடிக்கும், கெட்ட வார்த்தைகள் பேச பிடிக்கும், அப்பா மாராத்தி அம்மா கன்னடம் என்றாலும் இவனுக்கு தமிழ்மொழி பிடிக்கும். அவன் கல்லூரி முடித்து மத்திய அரசின் வேலையில் சேர்ந்தப்பின் வேலையை விட்டுவிட்டு சாமிராக போக வீட்டைவிட்டு கிளம்பிச் சென்று பிறகு வீடு திரும்பி இருக்கிறான். அவன் மத்திம வயதில் முஸல்மான்களை வெறுத்ததிற்காக்க வயோதிகத்தில் வருத்தப் பட்டிருக்கிறான். அவன் அப்பா வாடகை வீட்டிலேயே வாழ்ந்து முடிய இவன் சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறான். இவனுக்கு குழந்தை பேறு இல்லையென்றாலும் பிறரின் குழந்தைகள் மேல் பிரியமாகத்தான் இருக்கிறான்.
அறுபது வயது மனிதனின் வாழ்வை சொல்லும் கதை என்றாலும் இந்த கதைகளில் பெரும்பகுதி குழந்தைகளின் உலகைத்தான் சொல்கிறது. அது என்ன அது என்ன என்று வேடிக்கை பார்க்க அலையும் அந்த வயத்தின் ஏக்கத்தையும் விளையட்டையும் அப்பாவால் ஏற்படும் அவமானங்களையும் மிக நேர்த்தியாக சொல்லியுள்ளார்.
விமலாத்த மாமல்லனின் எழுந்து எளிமையாகவும் படிக்க படிக்க சுவராசியம் மிக்கதாகவும் இருக்கிறது. மிக குறைவான சொற்கள் மூலம் கதாப்பாத்திரத்தின் வாழ்வையும் வாழ்க்கை சூழலையும் மனவோட்டங்களையும் கச்சிதமாக சொல்லிவிடுகிறார்.
சத்ரபதி வெளியீடு பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு ஜீன் 2022 –ல் வெளியாகியுள்ளது. 26.07.2022.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...