2.27.2018

துளி . 146

கற்றவர்கள் நிறைந்த
நிலத்தில் தான் பசிக்கா
திருடியவனை அடித்தே
கொலை செய்தார்கள்..

கலாச்சார தொன்மை 
வாய்ந்தவர்களென வாய்கிழிய 
பேசியவர்கள் தான் 
சாதியின் பெயரால்
ஒரு அபலை குடும்பத்தை
பலாத்காரம் செய்து
படுகொலையும் செய்தனர்..

சாந்தியும் சமாதானமும் 
வேண்டியவர்களின் வாழ்வு 
சிதைக்கப்படுகிறது
அன்பை போதித்த
மதத்தின் பெயரால்

உள்ளூர் தொடங்கி
உலகம் முழுவதும்
அபலைகள் கொலை 
செய்யப்படுகிறார்கள்

குலை நடுக்கத்தோடு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தடுக்கும் வழியறியாது...

                                                  27.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...