9.27.2018

பதிவு . 12

கோவேறு கழுதைகள்

எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ” கோவேறு கழுதைகள் “ வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைய போகிறது. பல வருடங்களாகவே வாசிக்கப்பட வேண்டிய நூல்கள் பட்டியலில் இருந்த போதிலும் வாசிக்கப்படாமலேயிருந்த இந்நாவலை இப்போதுதான் வாசித்து முடித்துள்ளேன்.
கிராமங்களில் துணி வெளுக்கும் வண்ணார சாதி பெண்ணான ஆரோக்கியத்தின் வாழ்க்கை கதையை சொல்வதினூடாக இந்திய சமூகத்தின் பெரும் சாபமான சாதியின் கொடூரமுகத்தை / அதன் ஆணவத்தை ஆவணமாக இந்நாவலில் இமையம் பதிவு செய்துள்ளார்.
அழுக்கு துணிகளையும், அழுக்கு நீக்கப்பட்ட துணிகளையும் பொதி பொதியாக சுமக்கும் கோவேறு கழுதைகள் போலவே இச்சமூகத்தில் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மனிதர்களும் துன்பத்தின் பொதி மூட்டைகளை சுமக்க வெண்டிய சாபக்கேடு உள்ளது. அதிலிருந்து சிலர் வெளியேறினாலும், புற சூழலால், அகவமைப்பை மாற்ற முடியாத பலரும் அதிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கின்றனர்.
மதம் மாறினாலும் சாதியின் இழிவை சுமக்க வேண்டிய சூழல், கிராமங்கள் உணவு பயிர்களை விளைவிப்பதிலிருந்து பணப்பயிர் விவசாயத்துக்கு மாறிய சூழல், அரசியல் மற்றும் சினிமாவின் கவர்ச்சியால் மனிதர்களுக்குள் ஏற்பட்ட மன மாற்றங்கள் என பலவகையான பதிவுகள் இந்நாவலில் பதிவாகியுள்ளது.
இமையம் எளிய மனிதர்களின் ஆசாபாசங்களை அவர்களது மொழியிலேயே சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்நூலை க்ரியா பதிப்பகம் சிறப்பான முறையில் பதிப்பித்துள்ளது. இந்நாவலின் முதல் பதிப்பு ஜீலை 1994 வெளியாகியுள்ளது.

                                                                                                        22.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...