9.27.2018

துளி . 183

அஞ்சலி 

மாலைகள்சூடி கரம்பிடித்து 
இல்வாழ்க்கை பயணத்தை 
தொடங்கும் ஒரு
சுபமுகூர்த்த நாளில்
தன் இறுதிபயணத்தை 
தொடங்கினாள் 
எம்
பள்ளித்தோழி ஒருத்தி
உன் கழுத்தில்
கயிற்றை மாலையாக
சூடுவதற்கு முன்
ஏது நினைத்தாய் தோழி
பள்ளிக்கு சீராட்டி
அனுப்பி வைத்த
உன் பாலகனைப்பற்றி 
நினைத்திருக்கலாம்
உன் ஆசிர்வாதத்துடன்
வெளியூருக்கு வேலை
பார்க்க சென்ற
மற்றொரு மகனைப்
பற்றி யோசித்திருக்கலாம்
அயல்தேசத்தில் உங்களுக்காக
உழைக்க சென்ற
உனக்கு மாலைசூடியவரை
நினைத்திருக்கலாம்
அம்மாவை இழந்த
பிள்ளைகள் படும்
துயரை அனுபவித்திருந்தும்
உன் பிள்ளைகளின்
வாழ்வில் அம்மா
இல்லாது போகும்படி
ஏன் செய்தாயோ
செய்யதூண்டுயது எதுவோ
இனி யார் அறிவர்
கடன் பிரச்சனை
உடல்நிலை காரணம்
உறவுகளின் உதாசீனம்
உன் மறைவுக்கு ஆயிரம்
காரணங்களை சொல்லும்
ஊராரின் நாக்குகளை
கட்டுப்படுத்த முடியுமா
உன் மனம் நினைத்ததை
அறியா ஊர்மக்கள்
தம் மனம் நினைத்தை எல்லாம் 
பேசிதிரிவர் இனி
உன் உபசரிப்பில்
மகிழ்ந்த பெண்ணொருத்தி
உன் இழப்பின் துயர் தாளாது
உன் வீட்டு முற்றத்தில்
அலறுகிறாள் சுயமிழந்து
அந்த கூக்குரல்
உன் நினைவை சுமந்து 
காற்றில் பரவுகிறது
நீ விடைகாண விரும்பிய 
கேள்விகளும் பதில்தேடி
அலைகின்றன உனக்காக...
குறிப்பு :
நேற்று மரணத்தை தழுவிகொண்ட
எம் பள்ளித்தோழியும், உடன் பிறவா சகோதிரியுமான ரீட்டாவின் நினைவாக....

                                                                                           31.08.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...