9.27.2018

பதிவு . 13

கு.ப.ரா எழுத்துக்கள் – பாகம்.1
மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான கு.ப.ரா வின் படைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றும்மாக ஒரு சில மட்டுமே வாசித்திருந்தேன். அண்மையில் கு.ப.ரா வின் படைப்புகள் நண்பர் ஜெகதீஸ் மிகவும் வியந்து சொன்னார். அத்துடன் கு.ப.ரா பற்றி சாரு.நிவேதிதாவும், எஸ்.ரா வும் பேசிய இணைய இணைப்புகளும் அனுப்பி வைத்தார், அவர் அனுப்பி பல நாட்களுக்கு பிறகு அவர்களுடைய பேச்சை கேட்டதும் கு.ப.ரா. வுடைய படைப்புகளை உடனே வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. நூலகத்தில் பல நாட்கள் கு.பா.ரா படைப்புகளை பார்த்திருந்தும் அப்பறம் படிக்கலாம் என தள்ளிவைத்திருந்தேன். இப்போது அவற்றிலிருந்து முதல் பாகத்தை எடுத்து வந்து சுமார் மூன்று மாத கால அவகாசத்தில் வாசித்து முடித்துள்ளேன்.
கு.ப.ரா எழுத்துக்கள் முதல் பாகத்தில் மொத்தம் 38 சிறுகதைகள் உள்ளன. இவற்றில் சமூக கதைகள் 21, சரித்திர கதைகள் 17. மிக குறைவான பக்கங்களில் ஒரு உணர்ச்சியை அல்லது சம்பவத்தை அதன் உளவில் தன்மையோடு சிறப்பாக பதிவு செய்துள்ளார். தமிழ் சிறுகதை வளர்ந்து வந்த பாதையை இச்சிறுகதைகளை வாசிப்பதன் மூலம் அறியலாம். கிராமம், நகரம், சமகாலம், சரித்திர காலம், படித்தவர்கள், படிக்காதவர்கள் என பல தளத்திலும் கு.ப.ரா எழுதி பார்த்துள்ளார்.
சமூக கதைகளில் விடியுமா, பெண் மனம், வீரம்மாளின் காளை, குரலும் பதிலும், மின்னக்கலை, காதலே சாதல், திரை, விசலாட்சி ஆகிய கதைகளும், சரித்திர கதைகளில் புத்தர், அசோகர்,அக்பர் ஆகியோரின் சரித்திரத்தை களமாக கொண்ட கதைகள் எனக்கு பிடித்துள்ளன.
இந்த நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் தன் நூற்றாண்டு வெளியீடாக கொண்டு வந்ந்துள்ளது. இதை தொகுத்தவர் என யார் பெயரையும் குறிப்பிடவில்லை. நான் இதை பல காலம் படிக்காமல் தள்ளிவைத்தற்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்த சிறுகதைகள் எந்த ஆண்டு, எந்த இதழில் வெளிவந்தது போன்ற தகவல்கள் இல்லை. ஒரு வாசகனாக இதையெல்லாம் தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த தகவல்கள் அந்த கதைகளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக புரிந்துக்கொள்ள உதவுமென நம்புகிறேன்.

                                                                                                  25.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...