12.28.2020

பதிவு. 44

 அநீதி கதைகள் – அருண்.மோ

அண்மையில் படித்து முடித்த சிறுகதை தொகுப்பு அநீதி கதைகள். அருண்.மோ-வின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. ஆறு யாதார்த்த கதைகளும் நான்கு மாய யதார்த்த கதைகளும் அடங்கிய தொகுப்பாகும். அவற்றுள் வகை மாதிரிக்கு ஒரு கதை வீதம் இரண்டு சிறுகதைகளை மட்டும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
பூனைகள் மற்றும் பூச்சிகளால் முற்றுகையிடப்படும் நகரம் என புது மாய யதார்த்த உலகை இந்த தொகுதியில் படைத்திருக்கிறார் அருண்.மோ. “பசி” கதை ஊரடங்கு காலத்தில் பசியால் வீழும் ஒரு குடும்பத்தின் கதையை மாய யதார்த்தத்தில் சொல்கிறது. பசியின் குரூரத்தையும், மக்கள் நலனில் அக்கறையில்ல அரசின் பாரமுகத்தையும் ஆசிரியர் நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
இந்தியாவில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு சந்தரப்பத்தில் எதிர்கொள்ளக்கூட அதிமுக்கியமான கேள்வியாக இந்திய சமூகத்தில் கருதப்படும் ஒரு கேள்வியை முன்வைத்து “சோசியோபோயியா’’ என்ற கதையை எழுதியுள்ளார். அவர் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தும், அந்த கேள்வியால் அவர் படும் அவதியை மிகச்சிறப்பாக இந்தகதையில் அருண்.மோ பதிவு செய்துள்ளார்.
அருணின் எழுத்து நடை மிக எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. எல்லா படைப்புகளும் ஏதாவது ஒரு முக்கியமான சமூக பிரச்சனையே கருப்பொருளாக கொண்டுள்ளது. உள்ளதை உள்ளபடியே சொல்லிச் செல்கிறது.
அரச அடக்கு முறைக்கும் ஆளாகுபவனின் கதையானாலும், பெண்ணின் மீது அடக்குமுறையை செலுத்தும் ஆணின் கதையானாலும் யதார்த்ததை பிரதிபலிக்கிறது. ஒரு படைப்பாளியின் பணி உள்ளதை உள்ளபடி சொல்வதா அல்லது தீர்வு சொல்வதா அல்லது பாதிக்கப்படுபவனின் குரலை பதிவு செய்வதா என்ற கேள்விகள் எனக்கு அநீதிகளை படிக்கும்போது தோன்றுகிறது. என்னுடைய பதில்களும் ஒன்றுபோல் இல்லை. எனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது, உங்களுக்கும் அப்படி கேள்விகள் எழலாம்… வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள், நாம் விவாதிக்கலாம்.
அநீதி கதைகள் தொகுப்பு மூலம் அருண்.மோ சிறுகதை ஆசிரியராக இலக்கிய வெளிக்குள் நுழைந்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த பாரட்டுகளும் வாழ்த்துகளும்.
யாருவரும் பதிப்பகம் இந்த நூலை சிறப்பாக பதிப்பித்து (2020) வெளியிட்டுள்ளது.
இந்த வாசிப்பை சாத்தியமாக்கிய தோழர் பாரதிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

28.12.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...