3.19.2017

துளி .50


உங்கள் மீது
எவ்வளவு மரியாதை
வைத்திருந்தேன்
நீங்கள் இப்படி 
செய்வீர்கள் என்று
எதிர்பார்க்கவில்லை
எல்லோரையும்  போல
நீங்களும் சராசரி மனிதர்
என நிரூபித்து விட்டீர்கள் 
குற்றப்பத்திரிக்கை வாசித்து
விலகி செல்லும்
நண்பா
ஆசைகளும் நிராசைகளும்
நேசமும் துவேசமும்
பலமும் பலவீனமும்
எல்லாமும் உண்டு என்னிடம்
தப்பு செய்வதும்
மன்னிப்பு கேட்டலும்
இயல்பென வாழும்
சராசரி மனிதன்
நான்
விலகி செல்லும்
நண்பா
எங்கிருந்தாலும்
வாழ்க நலமுடன்

                                         16.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...